Saturday, March 15, 2008

ஓடிவாடி குட்டி.... என்னை கட்டி அணைக்க...........!


என்னவளே !

எப்போது
நான் உன்னை சந்தித்தேனோ
அப்போதிருந்து

நான்
நன்றாக நித்திரை அடிக்கிறேன்.
ஏனெனில்
எனது தலையில் இருந்த
சொல்ல முடியாத
ரகசியங்கள் எல்லாவற்றையூம்
சொல்லி FREE ஆகிட்டேன்
மறுபடி
இப்போ
நித்திரை வரவே மறுக்கிறது
உனது குசும்பு விளையாட்டுக்கள்
குதர்க்கப் பேச்சுக்கள்

செல்லக்கதைகள்

எல்லாம்
என் காதில் கிணுகிணுக்கின்றன.
உனது முத்தமின்றி
உதடுகள் காய்ந்து போகின்றன

உனது தரிசனமின்றி
கண்கள் மூடமறுத்து

சிவந்து போகின்றன

உனது அணைப்பின்றி
உடல் வெப்பம் குறைந்து

மைனஸ் டிகிறிக்கு போகின்றது.

உனது அன்பு வார்த்தைகளின்றி
காதுகள் அடைத்து
கேட்க மறுக்கின்றது
உனது சுவாசக்காற்று படாது
என் நெஞ்சு படபடத்து

ஏங்கி தவிக்கிறது.

எதற்கும்
ஒரு மாற்று வழி உண்டென்கிறார்கள்

உலகத்தார்.....

எனக்கு
அப்படி எதுவூம் வேண்டாம்.

நீதான்

எனக்கு
வேண்டும்
ஓடிவாடி குட்டி
என்னை கட்டி அணைக்க..........
உனது வரவை

வழிமேல் விழி வைத்து

காத்திருக்கிறேன்

Print this post

No comments: