Saturday, March 15, 2008

கர்த்தரே எம்மை மன்னித்தருளும்



எனது இனத்தை
தமிழ்ப்புத்திஜீவிகளை
தமிழ்ப்பணக்காரர்களை
தமிழ் வீரர்களை
எம் எதிர்கால சந்ததியினரை
தமிழ் இளைஞர் யூவதிகளை
திட்டமிட்டு கைது செய்து குண்டு போட்டு
அழிக்கிறார்கள்......

ஏன்? ஏன்? ஏன்?

எம்மினத்தை அழிக்க
தமிழினத்தின் வளர்ச்சியை தடுக்க
உலகத்தமிழினத்தின் ஒற்றுமையை குலைக்க
பொறாமை கொண்டவர்கள்
திட்டமிட்டு செய்கிறார்கள்.

யார்? யார்? யார்?

எறும்பு இறந்தாலே பாவம் என்று சொன்ன
புத்தனை கடவூளாக கொண்டவர்கள்..
அவர்கள்
புத்தனை கடவூளாக கொண்டவர்கள் அல்ல
புத்தனின் கொள்கைகளை கொன்றவர்கள்..

கர்த்தரே
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டு என்று சொன்னீர்
அறைந்தவன் திருந்தி விடுவான் என்று..
ஆனால் இப்போது
மறு கன்னத்தில் திருப்பிக்கொடு
என சிறு மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.
அறையின் வலியை அவனும்
உணரும் போது தான்
சற்று சிந்திக்கின்றான்....
முற்றாக திருந்தவில்லை........

Print this post

No comments: