Sunday, March 16, 2008

என்னருகில் நீயிருந்தால்...

















என்னருகில்

நீ
இருந்த போது
என்னையறியாமலே

எனக்குள்
ஒரு திமிர் இருந்தது
என்னை
யாராலும்
அசைக்கமுடியாதென்று....

ஆனால்
நீ சற்று தூரம் சென்றதும் தான்
எனக்கு புரிகிறது

நீ
என்னருகில் இல்லை என்றால்
என்னை
அசைத்து
விடலாம் என்று......!

அன்பே
என்னருகில்
இரு..
நான்
நானாக
இருக்க.......

Print this post

No comments: