Monday, May 12, 2008

காதலின் உருவாக்கம், கருவறையினுடைய கருவிலே,


















கருவறையின் உள்ளே
குருவாக பிரகாசிக்கும்
வருங்கால உலகத்தின்
திருமுடி ராசாவே..........!

சுருண்டு, படுத்து
மருண்டு விழித்து
பாவை போல நீ
படுத்து உறங்குகின்றாய்...!

ஆண்மகனின் வீரியத்தில்
பெண்மகள் கர்ப்பமுற்று
உனைச்சுமந்து பத்துமாதம்
தனைக்கொடுத்து உனை படைத்தாள்....!

தன்னையே பணயம் வைத்து
பத்து மாதம் தவமிருந்து
சத்தாக உண்டு, ஊட்டி வளர்த்து,
பூப்போன்ற கரு உன்னை
பூமியிலே ஈன்றெடுத்தாள்
உருவாக........!

கருவிலே இருக்கும் நீ
வெளியிலே வருமுன்பே - உன்
கருவிலே காதல் ஜோடியை
உருவாக்கி வைத்துள்ளாய்....!

காதலின் உருவாக்கம்,
கருவறையினுடைய கருவிலே,
கருவினுடைய கருவறையிலே
உருவாகி விடுகின்றது.....!

காதலுக்கு மரியாதை கொடுத்து
சாதலுக்கு விடை கொடுங்கள்.
பாதம் தொட்டு தாயவளின்
பாசத்தை பெற்றிடுங்கள்.....!

Print this post

No comments: