Sunday, September 14, 2008

விண்ணுயரப் பறந்த நட்பு....!!!

கிஞ்சித்தும் இரங்காமல்
வஞ்சித்து விட்டாய் - நீ
கெஞ்சிக் கேட்கிறேன்
தண்டித்து விடாதே...!

கண்ணிமைக்கும் நேரத்தில்
கருத்தோடிப் போனது
விண்ணுயரப் பறந்த நட்பு
வீணாகிப் போனது....!

விண்ணனானேன் உன்னால்
விரும்பிய துறையினில்
நன்றி உனக்கு சொல்வேன்
நாள் தோறும் என்வாயால்....!

கெட்டவனைத் தேடிய தர்மனுக்கும்
நல்லவனைத் தேடிய துரியோதனனுக்கும்
கடைசியி்ல் கிடைத்த பதில்
யாருமில்லை என்பது தான்....!

அவரவர் சிந்தனையோட்டத்திலேயே
கருத்துக்களை புரிந்து கொள்வர்
நல்லதாய் நினைத்தால் நல்லது
கெட்டதாய் நினைத்தால் கெட்டது....!

சந்தேகம் என்பது
செருப்பில் தைத்த முள் போல
எடுக்காது விட்டால்
குத்திக்கொண்டே இருக்கும் ....!

எடுத்துவிடு சந்தேகத்தை...!
தவிர்த்துவிடு தாழ்வு மனப்பான்மையை....!!
வளர்த்துவிடு சந்தோசத்தை.....!!!
கொடுத்துவிடு நட்புக்கு இலக்கணத்தை......!!!!

Print this post

1 comment:

Anonymous said...

"சந்தேகம் என்பது
செருப்பில் தைத்த முள் போல
எடுக்காது விட்டால்
குத்திக்கொண்டே இருக்கும் ....!"

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.