Tuesday, September 9, 2008

உறவுகளை மேம்படுத்திக் கொள்ள.....!!!


குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில்
விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும்
பெரிதாகாமலும் இருப்பதற்கு...

** நானே பெரியவன், நானே நிறத்தவன் என்ற அகந்தையை (Ego)
விட்டொழியுங்கள்

** அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்
கொண்டே இருப்பதை தவிர்த்து விடுங்கள்.

** எந்த விசயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காக
கையாளுங்கள் (Diplomacy). விட்டுக்கொடுங்கள்(Compromise).

** சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான்
ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

** எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும் அவர்கள் சம்பந்தம்
உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

** உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்
கொஞசம் தளர்த்திக் கொள்ளுங்கள்(Flexibility).

** மற்றவர்களுக்குரிய மரியாதையை கொடுக்கவும், இனிய
இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(courtesy).

** புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை
சொல்லவும் கூட நேரமில்லாதாது போல் நடந்து
கொள்ளாதீர்கள்.

இந்தக் கட்டளைகளின் படி நடந்தால் உறவுகள் நிச்சயமாக
மேம்படும்.

Print this post

No comments: