Tuesday, December 22, 2015

கோடி உனக்கு வணக்கங்கள்


காலை வேளை எழுந்து வந்து, உனை நான் பார்க்கின்றேன்
சிறிய புன் சிரிப்புடனே, எனையாளும் ஈஸ்வரியே
கறுகறுத்த கண்மணியால், எனையாட்டும் சங்கரியே
கோடி கோடி வணக்கங்கள்.... கோடி உனக்கு முத்தங்கள்.....

நீலச் சேலை தனையுடுத்து..., சிங்காரமாய் சிகை அமைத்து...,
கை நிறைய வளையலிட்டு..., காது கனக்க கடுக்கன் தூக்கி...,
நெற்றி நடுவில் பொட்டு வைத்து..., கண்களை உற்று உருட்டிப்பார்த்து...,
சிலையாட்டம் நின்றுகொண்டு.., சுண்டியிழுத்துக் கொல்கின்றாய்.

உன் வதனம் பார்க்கையிலே.., ஒருகோடி ஆனந்தம்..,
ஊற்றுப் போலே பொங்குகிறது... இதயம் துள்ளிக் குதிக்கிறது...
மயிர்க்கூச்சிட்டு நிற்கிறது... மனதில் ஆர்வம் பொங்குகிறது...
பெரும் பேறு பெற்றேன் என்று, பெருமை கொள்ள வைக்கிறது.

நீலச்சாரி அம்மா என்று.. உனை ஆசையுடன் அழைக்கையிலே..,
சாலச்சிரிப்பை உதட்டிலிட்டு.. தென்றலாய் எனைத் தழுவுகின்றாய்.
வேலவனின் அழைப்புடனே, உனையணைத்துக் கொள்கின்றேன்.
பலகோடி ஆண்டுகள் உன்னுடன் பதினாறும் பெற்று வாழ்ந்திட..!

Print this post

No comments: