Wednesday, December 16, 2015

என்னை ஆட்சி செய்


என்னவளே
உன் முகம் பார்த்து
உன் கண்கள் பார்த்து
உன்னை என்னுள் இருத்தி
உறுதி எடுத்துக் கொள்கின்றேன்
என் தேவதையாக
என்றுமே நிரந்தரமாக....!

என்றும் என்  இனியவளே
உன் கண்மணியாடும் திசையில்
நான் ஆடுவேன்
குண்டூலம் போல்
என் இதயத்தின் துடிப்பாகி
என்னை ஆட்சி செய்...!

என் உடலோடு  உடலுரசி
உடம்பெல்லாம் சூடேத்தி
மெய்மறந்து என்னை
இறுக்கி அணைத்து
இம்சை செய்.....!

புன்னகையை முகத்திலிருத்தி
பூரண மலர்ச்சியுடன் - எம்
பெயர் சொல்ல உலகுக்கு
முத்தொன்று கொடுத்திடு
என்றுமே அவன் முதல்வனாக....!

Print this post

No comments: