Wednesday, December 16, 2015

மூன்றெழுத்து மந்திரம்


அம்மா என்ற
மூன்றெழுத்து மந்திரத்தை
மூச்சு முழுக்க சொன்னால்
முழுமையாக அகலும்
மூண்டிருக்கும் துன்பங்கள்.
உன்னைச்சுற்றிச் சுழலும் - நீ
ஏங்கியிருக்கும் இன்பங்கள்.

அம்மாவின் ஆசி –அவள்
அன்புள்ளோர்க்கு இருந்தால்
அகிலத்தையே தூக்கி நிறுத்தும்
வல்லமை பெற்றிருப்பாய்.

ஆண்டவன் யாரென்று
யாருமே பார்த்ததில்லை
தெரியாத ஒன்றை
தெய்வமே என்கின்றனர்.

எமைப்படைத்த ஈஷ்வரி
அம்மா உடனிருக்க
சும்மா சுழல்கின்றார்
வணக்கமே செய்யாமல்.

அம்மாவை வணங்கிட்டால்
அனைத்துமே பெறுவாய்
அவளையே தொழுதெழுதால்
அனைவர் ஆசியும் பெறுவாய்.

Print this post

No comments: