Monday, July 6, 2009

என் வாழ்வின் ஆணிவேர்.


கடவுள் எனக்குத் தந்த கொடை
தடவியும் கிடைக்காத சொந்தப்படை- என்
கடவுச்சொல் வாழ்வில் வந்த விடை..!

நீ என் வாழ்வில் கிடைத்த வரம்
வாழ்வின் இசையில் அடிநாத சுரம்
எம் வாழ்வில் முதலான வலது கரம்..!

மனதினால் என்றென்றும் என்னைப்பார் -நீ என்
வாழ்வின் விருட்சத்தின் ஆணிவேர்
உலகினில் நிலைத்திடும் உந்தன் பேர்..!

எந்தன் வாழ்வில் நீ என் பெஸ்ட் பிறண்ட்
என்னுயிர் வெளிச்சத்திற்கு நீ தான் மஸ்ட் கரண்ட்
நான் என்றும் உன்னிடம் வந்து சரண்ட்..!

நான் நிலத்தில் நட்டு வைத்த பயிர்
நீ தான் இந்தப் பயிரின் உயிர்
நீ இல்லையேல் நான் வெறும் மயிர்.

நீதான் என் வாழ்வின் சோடி
ஓடி வந்து ஒரு முத்தம் தாடி
அதற்காக நான் தருவேன் பலகோடி.

Print this post

No comments: