Monday, July 6, 2009

ஏன் அப்படி அழுதாய்?

அன்புள்ளம் கொண்டவளுக்கு,
வணக்கம்.
நீ இங்கு நலம்
நீ விட்டுச்சென்ற கண்ணீர் தொடர்கிறது இன்றுவரை என்னுடன்….

ஏன் அப்படி அழுதாய்?
தாங்க முடியவில்லை எனக்கு…
இப்பவும் நீ அழுததை நினைத்தால் கண்கள் குளமாகி
உடைப்பெடுக்க தளம்புகின்றது.

அனுப்பும் போது அழவேண்டாம் என்று ஐயா
சொன்னதால் விடை பெறும் வேளையில் வேறு விடயங்கள் பேசி
என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஆனாலும் தொண்டை கனத்து மூக்கு சிந்தி குளமாகியது கண்கள்.

பாசமாகப் பழகி முப்பத்தாறு மாதங்கள் கடந்து விட்ட போதும்
நாமாக கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்ட எனக்கு
கட்டுப்படுத்த முடியவில்லை கண்ணீரை......

விரைவில் இருவரும் ஒருவராக வாழ்வோம்.

உனது அன்பும்,
இறை அருளும் இருந்தால்,
என்னை எதனாலும் அசைத்திட முடியாது.

வெற்றி வீரனாய்
வாழ்வின் உச்சியில்
நின்று வெற்றிக்கொடி நாட்டுவேன்.
இது சத்தியம்.

என்றென்றும் அன்புடன்
உன்னவன்.

Print this post

No comments: