Tuesday, May 17, 2016

முள்ளிவாய்க்கால்



முள்ளிவாய்க்கால் 
முரண்டு பிடித்து சிங்களவன்
முழு உலகையும் திரட்டி வந்து 
கொத்து கொத்தாய் குண்டு போட்டு 
சின்னஞ் சிறிசு முதல்
பென்னம் பெரிசு வரை
உடல் குதறி
அங்கம் பிளந்து 
கொலை
படுகொலை செய்தான் 
எம் தமிழினத்தை...! 

எக்காளமிட்டு
கொக்கட்டமடித்து
பக்கத்து நாட்டை காக்கா பிடித்து
வக்கணையாக பக்கச் செய்திகளை 
சக்கையாக கசக்கி எறிந்து
மக்களின் கண்களுக்கு மண் தூவி விட்டு
வெட்கமின்றி வெற்றிக் கூத்தாடுகின்றார்
உயிரற்ற எம் உறவுகளின் குவியல்களின் மேல்
தூ......

தெரியவில்லை அவனுக்கு 
வெற்றி பெற்றது தமிழன் என்று...

உயிர் துறந்த ஒவ்வொரு தமிழனும் 
பயிர் அறுத்த விதை நெல்லாய்
காலம் பார்த்து காத்திருக்கின்றனர்
விதை முளைத்து
எம் வீரம் பரப்பி 
தமிழர் 
துயர் துடைப்பர் அவர். 

அதுவரை 
எம் நெஞ்சகலா உறவுகளே
நிம்மதியாய் உறங்குங்கள்
தமிழீழம் பிறக்கும்
தமிழர் கொடி பறக்கும்
எம் தமிழ் தேசத்தில்....!!

Print this post

No comments: