என்
இதயத்தில் குடியிருக்கும்,
என்னுயிர் தேவதையே....,
என்னுள் சில ஆசைகள்,
உன்னோடு நான் இருக்கையிலே....!
உந்தனது கை கோர்த்து,
ஒரு பெருந் தெருவினிலே,
அனைவரும பார்த்து ரசிக்க,
உலவி வர ஆசை.....!
உந்தனது மடியினிலே
என் தலை வைத்திருந்து
மணிக்கணக்கில் சிரித்துப் பேசி,
மனமாற ஆசை......!
நீ தூங்கி இருக்ககையிலே,
மங்கிய நிலவொளியினிலே,
உன் வதனம் பார்த்திருந்து,
உன் அழகை ரசிக்க ஆசை......!
தலை குளித்து வரும் உனக்கு,
உன்கேசம் துவட்டி விட்டு,
மண மணக்க அகல் போட்டு,
தலை வாரிப் பின்னி விட ஆசை.....!
நீ கொள்ளும் கோபத்தில்,
உன் கண்களும் உதடுகளும்,
சொல்லத் துடிக்கும் ஒவ்வொரு வரிகளையும்,
தெளிந்தறிய ஆசை......!
உன் கொஞ்சல் கதைகள் கேட்டு,
உன் சிணுங்கல் நுணுக்கம் அறிந்து,
உன் ஆசைகளை நிறைவேற்ற,
எப்போதும் ஆசையோ ஆசை....!
உன் கண்ணோடு கண் சேர்த்து,
உன் இதயம் சொல்லும் வார்த்தைகளை,
அர்த்தம் பிசகாது அறிந்து கொண்டு,
ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழ ஆசை.....!
என்னுயிர் தேவதையே....,
என்னுள் சில ஆசைகள்,
உன்னோடு நான் இருக்கையிலே....!
உந்தனது கை கோர்த்து,
ஒரு பெருந் தெருவினிலே,
அனைவரும பார்த்து ரசிக்க,
உலவி வர ஆசை.....!
உந்தனது மடியினிலே
என் தலை வைத்திருந்து
மணிக்கணக்கில் சிரித்துப் பேசி,
மனமாற ஆசை......!
நீ தூங்கி இருக்ககையிலே,
மங்கிய நிலவொளியினிலே,
உன் வதனம் பார்த்திருந்து,
உன் அழகை ரசிக்க ஆசை......!
தலை குளித்து வரும் உனக்கு,
உன்கேசம் துவட்டி விட்டு,
மண மணக்க அகல் போட்டு,
தலை வாரிப் பின்னி விட ஆசை.....!
நீ கொள்ளும் கோபத்தில்,
உன் கண்களும் உதடுகளும்,
சொல்லத் துடிக்கும் ஒவ்வொரு வரிகளையும்,
தெளிந்தறிய ஆசை......!
உன் கொஞ்சல் கதைகள் கேட்டு,
உன் சிணுங்கல் நுணுக்கம் அறிந்து,
உன் ஆசைகளை நிறைவேற்ற,
எப்போதும் ஆசையோ ஆசை....!
உன் கண்ணோடு கண் சேர்த்து,
உன் இதயம் சொல்லும் வார்த்தைகளை,
அர்த்தம் பிசகாது அறிந்து கொண்டு,
ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழ ஆசை.....!
No comments:
Post a Comment