Friday, August 11, 2017
Tuesday, August 8, 2017
Saturday, March 11, 2017
Tuesday, May 17, 2016
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால்
முரண்டு பிடித்து சிங்களவன்
முழு உலகையும் திரட்டி வந்து
கொத்து கொத்தாய் குண்டு போட்டு
சின்னஞ் சிறிசு முதல்
பென்னம் பெரிசு வரை
உடல் குதறி
அங்கம் பிளந்து
கொலை
படுகொலை செய்தான்
எம் தமிழினத்தை...!
எக்காளமிட்டு
கொக்கட்டமடித்து
பக்கத்து நாட்டை காக்கா பிடித்து
வக்கணையாக பக்கச் செய்திகளை
சக்கையாக கசக்கி எறிந்து
மக்களின் கண்களுக்கு மண் தூவி விட்டு
வெட்கமின்றி வெற்றிக் கூத்தாடுகின்றார்
உயிரற்ற எம் உறவுகளின் குவியல்களின் மேல்
தூ......
தெரியவில்லை அவனுக்கு
வெற்றி பெற்றது தமிழன் என்று...
உயிர் துறந்த ஒவ்வொரு தமிழனும்
பயிர் அறுத்த விதை நெல்லாய்
காலம் பார்த்து காத்திருக்கின்றனர்
விதை முளைத்து
எம் வீரம் பரப்பி
தமிழர்
துயர் துடைப்பர் அவர்.
அதுவரை
எம் நெஞ்சகலா உறவுகளே
நிம்மதியாய் உறங்குங்கள்
தமிழீழம் பிறக்கும்
தமிழர் கொடி பறக்கும்
எம் தமிழ் தேசத்தில்....!!
பட்டியல் ;
கவிதைகள்
Wednesday, May 11, 2016
நீ எப்படி இருக்க வேண்டும்?
நீ எப்படி இருக்க வேண்டும்?
ஆனந்தவேதம் சொல்கிறது........ நீ நீயாக இரு...
°=°=°=°=°=°=°=°=°=°=
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் மனம் கொண்டு
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவரின் ஆசையில்
நீ சுகப்படாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கண் கொண்டு
உலகைப் பார்க்காதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கனவை
நீ காணாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே...
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வாழ்வை
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் சிந்தனை கொண்டு
நீ சிந்திக்காதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வழியை
உனதாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !
பட்டியல் ;
படித்ததில் பிடித்தது
Subscribe to:
Comments (Atom)
