Showing posts with label ஹைக்கூ... Show all posts
Showing posts with label ஹைக்கூ... Show all posts

Wednesday, November 4, 2015

நடிப்பா...?


Tuesday, April 2, 2013

நிஜம்.


மலர்

பொய்மை நிறைந்த உலகில்

இன்னும் மாறாதிருக்கும் நிஜம்.



மனம்

யாவரையும் ஆட்டிவைக்கும்

யாருமறியா அங்கம்



முகம்

ஒவ்வொருவரது மனத்திரையின்

புகைப்படப் பிரதி.

Sunday, March 10, 2013

உணர்வுகள்

அறிவுரை


கொடுப்பதற்கு இலகுவானது

வாங்குவதற்கு கடினமானது....!


காதல்


ஈருடல்

ஓருயிர்....!


கோபம்


உயிரினங்களுக்குள்

உறங்கிக் கொண்டிருக்கும்

மிருகக் குணத்தின்
திடீர் எழுச்சி

Friday, March 8, 2013

தாய்

பெண்


உலகில் உள்ள

உயிரினங்களின் தாய்.....!





பூமி


எந்தவித பேதமுமின்றி

உயிரினங்களை வாழவைக்கும்

உன்னத தாய்....!

Tuesday, February 19, 2013

புரோகிதரும் கடவுளும்

புரோகிதர்


கடவுளுக்கும் பக்தர்களுக்குமான

மொழி பெயர்ப்பாளர்.


கடவுள்


மனிதனால் படைக்கப்பட்ட

மாயை....!

Tuesday, February 12, 2013

சீதனம்


01. ச்சீ....

      தனம்...!


02. அன்பளிப்பு எனும் பெயரில்

      அடாத்தாகப் பெறப்படும்

      அவாச் சொத்துக்கள்....!


03. பெற்றோரால் பேசப்படும்

      மாப்பிள்ளைகளின்

      ஏலப் பெறுமதி.....!

Wednesday, April 21, 2010

சமவுரிமை

சமவுரிமை
----------

சாதி மத பேதமின்றி

ஏற்றத் தாழ்வு இன்றி

சிறிது பெரிது இன்றி

ஆண் பெண் வேறுபாடின்றி

அனைவருக்கும் சமவுரிமை
சுடலையில்.


பிறப்பும் இறப்பும்
----------------

அனைத்தையும் அனுபவிக்க பிறப்பது ஒரு முறை

அவற்றையெல்லாம் பொய்யாக்க இறப்பது ஒரு முறை

இயற்கையின் நியதி
------------------

மானம் கற்பு போனால் வராது

மரணம் கழிபெயர் வந்தால் போகாது.