Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Sunday, May 18, 2014

துணை தேடும் இணைகள்

 


" உது மாதிரியான விடயங்கள் தான் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் கிளறுது....

நானே கஸ்ரப்பட்டுத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறன்........

பிறகு வேலையாக இருக்கிறியோ.. சாப்பிட்டியோ என்று கேட்டுக் கொண்டு...

ச்ச்செ......"

என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் சூரியா, தன் கணவர் சந்திரனிடம்.

 

சந்திரன் அகதியாக தஞ்சம் கோரி அவுஸ்ரேலியத் தடுப்பு முகாமில் 3 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றான். அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் உறவினர்களைத் தொடர்பு கொண்டு கதைப்பதற்காக அவனுக்கு வாரத்துக்கு 3 தொலைபேசி அட்டைகள் வழங்கப்படுகின்றது.

 

அதன் பிரகாரம் அவனது பெற்றோர், மனைவியின் பெற்றோருக்கு வாரமொரு முறையும் சூரியாவுக்கு தினமும் அவளது நேரம் பிற்பகல் 7 மணிக்குத் தொடர்பு கொள்ளுவான். அப்போது அவனது நேரம் 10 மணியாகி விடும் என்பதால் அவனது அறையில் வசிப்பவர்கள் எல்லாம் தூங்கிவிடுவார்கள்.

 

அவர்களது நித்திரை கலைந்து விடக்கூடாது என்பதற்பாக சற்று மெதுவாகவே தொலைபேசியில் பேசுவான் சந்திரன். அதேவேளை அவனுக்கு வழங்கப்படும் தொலைபேசி அட்டையும் மிகத்துல்லியமற்ற சம்பாசனைகளையே அனுப்பும். அப்போது கேட்பவரகளுக்கும் கொஞ்சம் கஸ்ரமாகத் தான் இருக்கும்.

Monday, March 31, 2014

பலூன்



 



" மாமா பெரிசாக ஊதாதையுங்கோ.....
அப்பா..... ,
 
மாமாவை ஊதவேண்டாம் என்று சொல்லுங்கோ......"


என்று கண்கள் அகல விரிய,
முகத்தில் பயம பரவ,
சத்தமாக கத்தி அழுதுகொண்டு,

காதுகள் இரண்டையும் தனது பிஞ்சுக் கைகளால் பொத்திக்கொண்டு ஓடிப்போய் 
இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு,

கதிரைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டான் எட்மன்.



எட்மனுக்கு 9 வயது தான் ஆகிறது. அந்தக் குடும்பத்தில் மூத்த பையன்.
 

5 வருடங்களின் முன்னர் அவன் மிகச் சுட்டிப்பையன்.

அவனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது தத்தளிக்கும் அவனது பெற்றோரும், அம்மம்மாவும்,4 வயதிலேயே அவனது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ,விவேகமும் திறமையும் அவர்களை ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.
 

அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். கிறிஸ்மஸ் என்றாலே அவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அவர்களது வீட்டை பலூன்கள்,அலங்கார வளைவுகள் என்பவற்றுடன் கிறிஸ்மஸ் மரத்தினை வர்ண வர்ண மின்குமிழ்கள் கொண்டு அலங்கரித்து தமது அனைத்து வசதிகளையும் முயற்சியையும் வெளிப்படுத்தி தமது ஆனந்தத்தை பகிர்ந்து கொள்வார்கள்.



பலூன்கள் ஊதி கட்டி அலங்கரிப்பதற்குள், ஒவ்வொரு பலூனாக, அவற்றின் மேல் விழுந்து உடைத்து விட்டு, கொக்கட்டம் போட்டுச் சிரிப்பான் எட்மன். சில வேளைகளில், எட்மனின் சுட்டித்தன வேலைகளை நிறுத்த , அவனுக்கு ஒரு அடி போட்டு பலூன் உடைப்பதை நிறுத்த முயற்சி செய்வாள் அம்மா மேரி.
அம்மம்மா மரியமோ,


" ஏன்டி பிள்ளைக்கு அடிக்கிறாய்.....? "
 

என்று மகள் மேரிக்குத் திட்டிவிட்டு எட்மனைக் கூட்டிக்கொண்டு கடைக்குச் சென்று ஒரு பக்கற் பலூன் வாங்கி வந்து அவன் உடைப்பதற்கென்றே அப்பக்கற்றில் இருக்கும் 50 பலூன்களையும் ஒவ்வொன்றாக ஊதிக்கொடுத்து உடைக்கச் செய்வாள்.
 

அப்பலூன்களை உடைப்பதற்காக ஒவ்வொரு பலூன்களின் மேலும் விழுந்து அவன் உடைக்க எடுக்கும் முயற்சியையும் உடைந்தபின்னர் அவன் ஏதோ ஒரு சாதனை செய்து விட்டது போன்று பெரிதாகச் சிரித்து ஆனந்தமடையும் அப்பிஞ்சினைப் பார்த்து புளகாங்கிதமடைவாள் மரியம்.
 

எட்மன் அம்மம்மாவின் செல்லக்குட்டி. எனென்றால் அவன் தான் அவளுடன் சேர்ந்து இருக்கும் முதலாவது பேரப்பிள்ளை. மரியத்தின் மற்றப் பிள்ளைகளின் ஊடாக பேரப்பிள்ளைகள் இருந்த போதும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கனடாவிலேயே வசித்து வருகின்றனர்.


அதனை விட எட்மன் அச்சு அசலாக மரியத்தின் மூத்த பிள்ளை போன்று இருப்பான். எல்லாமாகச் சேர்ந்து மரியத்துக்கு எட்மன் மீது அளவு கடந்த பாசத்தை அள்ளிக் கொட்டியிருந்தது.


இப்படி பலூன் என்றாலே ஊதி உடைத்து அந்தச் சத்தத்தில் சந்தோசமடையும்

எட்மன், ஏன் இப்போ பயந்து ஓடுகின்றான் என்றால் அவனது 5வது வயதில் நடந்த பயங்கரமான சம்பவம் ஒன்று தான் காரணமாக இருந்தது. இப்போதும் மாறாத வடுவாகவும் இனிமேலும் அப்படி ஒரு சத்தத்தைக் கேட்டு விடக் கூடாது என்றும், நினைத்தாலே பயங்கரமானதாக நிரந்தரமாக அந்தப் பிஞ்சு நெஞ்சில் ஒட்டிக்கொண்டு விட்டது.



 

எந்தச் சத்தத்தைக் கேட்டு சிரித்து அளவில்லா ஆனந்தமடைவானோ அதே போன்ற ஒரு வெடிச்சத்தம் அவனுக்கு ஒரு முடிவில்லாத் துன்பத்தைக் கொடுத்து அந்தச் சத்தத்தின் மீது வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அப்படியொரு சத்தத்தை மீண்டும் கேட்டு விடக் கூடாது என்று எண்ணியது. உள்ளம் உயிர் அனைத்தையும் நடுங்க வைக்கும் பயத்தையும் கொடுத்திருந்தது.
 

2009ம் ஆண்டு இலங்கையில், இலங்கை அரசின தந்திரக் கதைகளைக் கேட்டு தமது உடமைகள் நிலங்கள் வீடுகளை விட்டு உடுத்த துணிகளுடன் காவிச்செல்லக் கூடிய உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட " பாதுகாப்ப வலயங்கள் " ஒவ்வான்றாகச் சென்று இறுதியாக முள்ளிவாய்கால் கடற்கரையில் அனைவரும் அனல் பறக்கும் வெயிலில் துணிகளாலும் தறப்பாள்களாலும் கூடாரம் அமைத்து தமது உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு அடுத்த அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
 

ஒரு பக்கம் சமுத்திரக்கடல் யாரும் எங்கும் செல்ல முடியாதவாறு தடுத்துக் கொண்டிருந்தது. மறுபக்கம் சுற்றிவர இலங்கையரசின் கொடும் இராணுவப்படைகள், உயிர்க்கொல்லி ஆயுதங்களால், சூட்டையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் புலிகள் மீது தாக்குவதாகக் கூறிக்கொண்டு தனது சொந்த மக்கள் மீதே ஏவிக் கொன்று கொண்டு முன்னேறியது.
 

உலகில் எந்த நாடும் இலங்கையரசை ஒரு கேள்வி கேட்கவில்லை. பதிலாக அவர்களுக்கு உயிர்க்கொல்லி ஆயுதங்களைக் கொடுத்து உதவியது. தமது கேந்திர அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையைத் தமது கைக்குள் வைத்திருப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு வந்து தமது உதவிகளை வழங்கி இலங்கையைத் தமது பக்கம் சாய்த்துக் கொள்ள முயற்சிகள் செய்தார்கள்.
 

பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும், காட்டித் தப்பிக் கொள்ளும் விலாங்கு மீனைப் போல, எந்த நாட்டுக்கு எந்தமுகத்தைக் காட்ட வேண்டுமோ, அந்த நாட்டுக்கு அந்த முகத்தைக் காட்டி தனது காரியங்களைச் சாதித்ததோடல்லாமல், யாருடைய தொந்தரவுகளுமின்றி மிகப்பெரிய இனஅழிப்பையே செய்து கொண்டிருந்தது இலங்கையரசு.
 

இதனால் உலக நாடுகளால் தயாரிக்கப்படும் அனைத்து புதிய ரகக் குண்டுகளான கொத்துக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள், விமானக் குண்டுகள், எரிகுண்டுகள், விதம் விதமான ஏவுகணைகள், என அனைத்தும் இலங்கைத் தமிழர்கள் மீது அனைத்து நாடுகளின் ஆசீர்வாதத்துடன் பரிசீலித்துப் பார்க்கப்பட்டது.
 

உலக நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களினதும் குண்டுகளினதும், பரிசீலனைக் களமாக இருந்த முள்ளிவாய்க்காலிலேயே அந்தப் பிஞ்சின் மனதில் ஆறாத வடுவாக ஒரு சம்பவம் நடந்தேறியது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே, கடலில் சென்று குளித்து விட்டு வந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள் மரியம். என்ன கஸ்ரம் வந்தாலும் வெள்ளிக்கிழமை என்றால், கடவுளைப் பிரார்த்தனை செய்வதை நிறுத்தமாட்டார்கள் தமிழர்கள்.
 

தமது கஸ்ரங்களையும் துன்பங்களையும் கடவுளிடமே கண்ணீர் விட்டு முறையிட்டு, தமது கவலைகளைப் போக்கி நிம்மதியடைவார்கள். அவ்வகையில் மரியம் பிரார்த்தனையை ஆரம்பிக்க, எட்மனை மரியத்துடன் விட்டு விட்டு மேரியும் கணவரும் கடலுக்குக் குளிக்கச் சென்றார்கள். மரியம் பிரார்த்தனையில் இருக்கும் போது எட்மன் கூடாரத்தின் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
ஏவுகணைகள் ஆங்காங்கு வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. மக்கள் காயப்பட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள். தினம் தினம் ஆயிரக்கணக்கில்.... கொத்துக் கொத்தாக....!



ஆரம்பத்தில் தமது சாவுக்கு அஞ்சியவர்கள் இப்போது எதனையும் கருத்தில் எடுப்பதில்லை. திறந்த வெளியில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட " பாதுகாப்பு வலயம் " எனுமிடத்தில் இலங்கையரசின் கொடும் இராணுவத்தினால், அங்கிருந்து எங்கும் தம்பி ஓடிவிட முடியாதபடி சுற்றிவளைக்கப்பட்டு வஞ்சகமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
 

கண்மூடித்தனமாக மக்களையே குறிவைத்துத் தாக்கப்படும் ஏவுகணைகளுக்கு, அந்த வெள்ளை வெளேரென்ற கடற்கரை மண்ணிலும் கடும் நீலக்கலரில் இருக்கும் சமுத்திரக் கடலிலும் எங்கே சென்று ஒழித்துக் கொள்வது? மூன்று லட்சம் பேரும் எங்கே சென்று மறைந்து கொள்வது..? அதனால், அங்கிருந்த மக்களுக்கு " போற உயிர் எப்போதோ ஒரு நாளைக்குப் போகத் தானே போகிறது.... இனியும் எங்கோ போய் ஒழித்துக் கொள்வது...." என்று விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார்கள். ஏவுகணைகள் ஏவப்படும் சத்தங்கள் கேட்ட போதும் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் காயப்பட்டு அழுந்திச் சாவதை விட ஒரேயடியாகச் செத்து மடிந்து விட வேண்டும் என்பதே கடவுளிடம் அவர்களது பிரதான மன்றாட்டமாக இருந்தது.
 

அப்படி வந்த ஏவுகணையில் ஒன்று தான் மரியம் பிரார்த்தித்துக் கொண்டிருந்த கூடாரத்தின் மீதும் வீழ்ந்து வெடித்து ஒரே நொடியில் அவளை இரத்தமும் சதையுமாக்கி அவளது உயிரைக் காவு கொண்டு அப்பிஞ்சின் மனதை சுக்கு நூறாக்கியிருந்தது.
 

கூடாரத்தின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததால் எட்மன் அதிஸ்டவசமாகத் தப்பி விட்டான்.
 

மேரியும் கணவரும் வந்து கத்திக் குளறி ஒப்பாரி வைத்தனர். அப்போது எட்மனும் அழுதான். அவனது கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. அழுகிறான் அழுகிறான் சத்தமே வரவில்லை..அழுது அழுது குரல் எல்லாம் அடைத்து விட்டது... ஏனென்றால் இரத்தமும் சதையுமாக மீண்டும் வரமுடியாதபடி கிடப்பது அவனது அன்புக்குரிய அம்மம்மா என்பதே.
 

அம்மா தனக்கு அடிக்க வந்தால் அம்மம்மா எட்மனுக்கு அடைக்கலம் கொடுப்பதோடு அல்லாமல் தனது தாயாரை தடுத்து கட்டுப்படுத்தும் அதிகாரம் அம்மம்மா ஒருவருக்கே இருந்ததாக அவன் நம்பியிருந்தான்.
 

தனது சிறிய சிறிய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றி வைத்த அம்மம்மா இப்போ உயிருடன் இல்லை. எந்த மாதிரியான வெடிச்சத்தத்தை விரும்பி விளையாடி மகிழ்ந்தானோ அந்த விதமான ஒரு வெடிச்சத்தமே தனது அளவில்லா அன்புக்குரியவரின் உயிரைப் பறித்தது.... தன்னிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தது.. என்று அந்தப் பிஞ்சின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டது. இனிமேலும் அந்தச் சத்தத்தைக் கேட்டு விடக் கூடாது என்று அந்த ஒன்பது வயதுப் பிஞ்சின் மனம் உறுத்திக் கொண்டிருந்தது.
அன்று கிறிஸ்மஸ் தினத்துக்காக வீட்டை அலங்கரிப்பதற்காக போதே நண்பர்ஒருவர் பலூன் ஊதும் போதே தனது காதுகளைப் பொத்திக் கொண்டு ஓடிப்போய் கதிரையின் பின் ஒளிந்து கொள்ளவும், கோழி தனது இறகுகளுக்குள் தனது அனைத்துக் குஞ்சுகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் காப்பது போல் மேரி தன்மகனைக் கட்டி அணைத்து விம்மத் தொடங்கினாள்.
 

ஏனென்றால் மரியத்தின் இழப்பு எட்மனுக்கு மட்டுமல்லாமல் மேரிக்கும் அந்தச் சம்பவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
 

மீண்டும் அந்த நினைவழியா தடங்களுடன், தனக்கிருந்த கவலைகளை மறைத்து, வீட்டை அலங்கரிப்பதனை நிறுத்தி விட்டு எட்மனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு மேரியையும் சமாதானம் செய்ய முற்பட்டார் கணவர் ஜோசப்.


Friday, February 7, 2014

சந்திர சூரியன்


"நீங்கள் தான் வேலை வேலை என்று போய் மாதக்கணக்கில இருந்து விட்டு வாறீங்கள். ஆனால் நான் இஞ்சை இருந்து இந்த ரெண்டு பிள்ளையளோடையும் என்ன பாடு படுகிறேன் என்று எனக்குத் தான் தெரியும்......"
என்று அஞ்சலி புலம்பிக் கொண்டிருந்தாள் தன் கணவர் ராசனிடம்.

சந்திரன் சூரியன் என இரு ஆண்குழந்தைகள். மூத்தவனுக்கு 4 அடுத்தவனுக்கு 2 வயது.

ராசன் அரச சுரங்கத் திணைக்களத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். வேறிடங்களில் வேலை செய்யக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தாலும் கூடிய சம்பளத்திற்காக இலில் வேலைக்குச் சேர்ந்து சனி ஞாயிறு - இரவு பகல் என்று பாராமல் வேலை செய்து கொண்டிருந்தார்.

தான் ஒரு சொந்தமாக அழகான ஒரு வீடு அவர்களது ஊராருக்கு இணையாகக் கட்டி மற்றவர்களின் குத்தல் கதைகளுக்கும் குசும்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.

ஏனென்றால், அஞ்சலியும் ராசனும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவர் வீட்டிலும் சரியான எதிர்ப்பு. இதனால் ஆரம்பத்தில் யாருடைய உதவிகளும் இன்றி ரொம்பவே கஸ்ரப்பட்டு ஒரு நிலம் வாங்கி கொட்டில் ஒன்றைப் போட்டாலும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அஞ்சலி ராசனிடம் சொல்லி அழுது கொண்டிருந்ததை, சந்திரனும் சூரியனும் அவதானமாகப் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

ராசனும், அஞ்சலியிடம்

" எனக்குத்தெரியும் அஞ்சலி கெட்டிக்காரி...
எல்லாத்தையும் சமாளிப்பாள்.....
நான் கொஞ்சக் காசு உழைச்கு சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி, நாங்களும் மற்றவர்கள் நிமிர்ந்து பாக்கிற மாதிரி நடந்து காட்ட வேணும். இன்னும் கொஞ்ச நாளைக்கு சமாளியுங்கோம்மா...."

என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆனால் அதில் ஆறுதலடையாத அஞ்சலி எழுந்து நிற்க, ராசனும் எழுந்து அவளைக் கட்டியணைக்க முற்பட்ட போது, அஞ்சலியின் காலில் இருந்த புண்ணை ராசனின் கால் தெரியாமல் பட்டு விடவே, வீரிட்டுக் கத்தினாள் அஞ்சலி.

 முன்னரே கவலையில் இருந்த அஞ்சலிக்கு, புண்ணில் ஏற்பட்ட வலி அவளது அழுகைக்கு பிரதான காரணமாக இருந்தது. ராசனும் என்னவென்று தெரியாமல் அஞ்சலியின் அழுகையை கட்டுப்படுத்த முயற்சித்தான்.

Sunday, November 17, 2013

Astonishment

I had the flu. It was a constant irritant and I was suffering lots of pain. I did not want to spread this terrible flu to others. My suffering was bad enough. So I decided to take the day off work. I sent an email to my office and went back to bed.

However, I found I could not stay in bed. I am, by nature, a workaholic. As I lay in bed, I looked around my room.
There were a few more clothes in the laundry basket, so I woke up properly, had some of the ginger tea which helps to relieve the flu symptoms and took the clothes to the launderette, which was 50 metres from my room.

No-one was there. As it was about 10am on a Friday, most of the usual customers were at work. But when I entered, I noticed a suitcase in the middle of the floor.

I loaded my clothes into the machine and turned it on. I had an hour to spend while my clothes were washing and drying, so I started to read the magazines I had brought along. But I found I could not concentrate on reading because of the suitcase in front of me.

No-one was there. All the machines were off except the one I was using. There were too many questions bubbling up in my mind about the suitcase. In the end, I decided to open the suitcase and see what was in it - but still I was scared. What was inside? Who had brought it there? Why had they placed it in the middle of the floor? If someone had forgotten it, it should have been near one of the seats or on top of one of the machines, but it was in the middle of the floor.

So it had been someone's deliberate plan to place it there in full view of anyone who entered the launderette. It might contain explosives.

There are lots of movies showing such incidents. An anonymous box is in a place where people gather. Someone tries to open it. The box explodes and the people are killed.

But, despite my fears, my mind kept insisting that I should open the suitcase and there would be money inside. Because it was my dream to adopt children who have lost their parents through the horrors war or other circumstances, those who are poor, are craving for food or are seeking to study.

I was thinking seriously about the suitcase and whether to open it or not. If it contained money, my dream would come true. If it contained explosives, my life would end with a big bang and it would hit the headlines the next day in all the newspapers in the country, perhaps even the world. I had spent 30 minutes in the launderette.

Still no-one came. I looked in the street. There was no-one there too. My mind, eaten up with curiosity, was pushing me forward to look inside the suitcase.

Christians have a saying, "Knock at the door and it will open for you. Do not think that it is locked. Sometimes it is just closed." So I prayed to God and took a coin and tossed it. Heads and I would call the police. Tails and I would open the suitcase.

Sunday, November 3, 2013

குடும்பத்துக்கா பணத்துக்கா முன்னுரிமை?

சுபா தனது திருமணத்திற்காக குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்திருந்தாள். அங்கு வந்ததும் முதல் வேலையாக எல்லோருக்கும் தொடர்பு கொண்டு தனது திருமண விபரத்தைத் தெரிவித்தாள்.

அவ்வாறே சாம்பவிக்கும் சுபா தொடர்பு கொண்டு, " எனது திருமணம் இன்னும் இரு நாட்களில் நடைபெற இருக்கிறது. சித்தப்பாவிடம் சொல்லி விடுங்கள் " என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

சுபா, சாம்பவியின் கணவரின் அண்ணனின் மகள் ஆவாள்.
ஆனாலும் சாம்பவி தனது வேலை அசதியால் உடனடியாகத் தன் கணவனிடம் சொல்லாவிட்டாலும் மறு நாள் சொல்லி விட்டாள்.

ஆனாலும் சுபாவினது தொடர்பிலக்கத்தை குறித்து வைக்கவோ அல்லது அவளது தொலைபேசியில் சேமித்து வைக்கவோ நினைக்கவில்லை. ஏனென்றால் குடும்பத்தினர் தானே... பின்னரும் தொடர்பு கொள்வார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

மென்மேலும் வந்த தொடர்புகளால் சுபாவினது இலக்கம் தொலைபேசியில் இருந்து மறைந்து போய்விட்டது. ஏனென்றால் கடைசியாக உள்வந்த தொடர்புகளுக்கான 10 இலக்கங்களே சேமித்து வைக்கக்கூடியவாறு தொலைபேசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் மறுபக்கம் சுபாவோ, சித்தியிடம் சொல்லிவிட்ட பின்னரும் திருமணமாகி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் சித்தப்பா தனக்கு தொடர்பு கொண்டு வாழ்த்தவில்லையே என்று கோபத்தில் இருந்தாள்.
அவளது தொடர்பிலக்கம் தொலைபேசியில் இருந்து அழிந்து விட்டது என்பதும் சாம்பவியின் கவலையீனத்தால் நடந்தது என்பதும் சுபாவுக்குத் தெரியாது.

ஆனால் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து வந்த தொடர்புக்கு விடையளித்து விட்ட சாம்பவி முதல் வேலையாக அவ் வாடிக்கையாளரின் தொடர்பிலக்கத்தை தொலைபேசியில் இருந்து எழுதி விட்டு இலக்கங்கள் சரியாக எழுதப்பட்டுள்ளதா என்று ஒவ்வொரு இலக்கமாக பார்த்து மீள உறுதிப்படுத்திய பின்னரே மறு வேலை பார்த்தாள்.

Monday, October 21, 2013

முதற் பயம்

" தம்பி இந்த தேத்தண்ணியைக் வயலுக்குக் கொண்டு போய் அம்மாக்களிட்ட குடுத்திட்டு வாறியோ.... அச்சாப்பிள்ளை...." என்று அப்போது தான் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு இருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போத்தலினுள் தேனீரை ஊற்றி மூடிக் கொண்டே என்னிடம் கேட்டாள் என் அக்கா.

நானும் வயலுக்குப் போய் அந்த பச்சைப் பசேல் என்ற நெல்வயலைப் பார்க்கும்ஆர்வத்தில் " ஓமோம் தாங்கோ கொண்டு போய் குடுக்கிறன்.." என்று வாங்கிக் கொண்டேன்.

அப்போது அக்கா " இண்டைக்கு களி வயலுக்குத் தான் புல்லுப் பிடுங்கப் போறதெண்டு அம்மா சொன்னவா. அங்கை போய்ப் பார். அங்கை இல்லையென்றால் பெரியக்காவின்ரை வயலுக்குப் போய்ப் பார்" என்று சொன்னாள்.

" ஓமோம் " என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வயலை நோக்கிப் பறந்தேன்.

எமது ஊர் ஓர் அழகான ஊர். எங்களது வீட்டிலிருந்த 200 மீற்றருக்கு முன்னாடி ஒரு கிலோ மிற்றர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தில் நெற்பயிர்ச செய்கை செய்வார்கள்.

இது மழை காலத்தில் மட்டும் அதாவது ஒரு போகம் மட்டுமே நெற்பயிற் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் வயல்வெளியில் வீசும் குளிர்காற்றை அனுபவிப்பதற்காகவும் அக்காற்றினில் அலை போன்று அசைந்தாடும் நெற்கதிரின் பச்சைப் பசேல் என்ற கண்ணுக்கு குளிற்சியான அவ் வண்ணத்தை ரசிப்பதற்காகவும் நான் அங்கு செல்ல ஆசைப்படுவேன்.

ஆனாலும் எனக்கு அப்போ சிறிய வயது என்பதால் மழை காலத்தில் வெளியில் சென்றால் வருத்தங்கள் வந்து விடும் என்று தாய்மை உள்ளத்தோடு கண்டிப்பாக வயல்வெளிக்குச் செல்ல அம்மா அனுமதிப்பதில்லை.

சில சமயங்களில் அம்மாவுக்குத் தெரியாத வகையில் ஓடிப் போய் வயல்க் காட்சிகளை ரசித்து விட்டு வந்து அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டதும் உண்டு.

எமது வீட்டினருகில் வயல் வெளியிருந்தும் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று பலமுறை ஏங்கியதும் உண்டு.

இப்படியான ஏங்கங்கள் இருந்த காலத்தில் தான் அக்காவும் அம்மாவுக்க தேனீர் கொண்டு சென்று கொடுக்குமாறு கூற சந்தோசத்தில் பறந்து வயல் வெளிக்கு வந்தேன்.

அக்கா சொன்ன களி வயலில் அம்மாக்கள் இல்லாதது எனக்கு மிக்க சந்தோசத்தைக் கொடுத்தது. ஏனென்றால் களிவயல் இருப்பது வீதியோரத்தில். ஆகையால் நான் தேனீரை அம்மாவிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுமாறு கூறி விடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் தான் சந்தோசத்துடன் வயல்களின் நடுவே இருந்த பெரியக்காவின் வயலை நாடிச் சென்றேன்.

அங்கே அம்மா, சித்தி, பெரியக்கா, பெரியண்ணா, ஐயா எல்லோரும் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மா, குட்டியக்கா தேத்தண்ணி தந்துவிட்டவா..." என்றேன்.

Tuesday, September 3, 2013

இருந்தும் இல்லாதவர்கள்


எனக்கு அம்மா இல்ல... …..........
அப்பா இல்ல.....................
அண்ணா இல்ல.................
யாருமே இல்ல...............
நான் ஏன் உயிரோட இருக்கணும்..............
நான் சாகப் போறன்.......................”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள் பொற்கொடி.

பொற்கொடிக்கு 21 வயது தான் ஆகிறது. செந்தளிப்பான, அழகான வட்ட முகம். நேர்த்தியாக வாரியிழுத்துப் பின்னப்பட்ட தலைமுடி, முத்துப் போன்ற பல்வரிகள் என அனைத்து அழகையும், அவளுக்குக் கொடுத்த இறைவன், அவளது வயது, உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் சற்று உருவத்தில் பெரிய உடலை அவளுக்கு கொடுத்திருந்தான்.

பொற்கொடி வீட்டில் ஒரே பொண்ணு. கடைசிப்பிள்ளையும் கூட. முத்த இருவரும் அண்ணன்கள். அவர்கள் இருவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு, தமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்றவாறு ஏனோ தானோ என்று இருந்தார்கள்.

இவளுக்கு 14 வயது இருக்கும் போது, தாயாருக்கும் தந்தையாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிறிய பிரச்சனை பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை சென்றது. பிறகென்ன? விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். நீதிமன்றம் இவர்கள் மீண்டும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக, ஒரு வருட கால அவகாசம் வழங்கி தீர்ப்பைத் தள்ளிப் போட்டது.

இந்த ஒருவருடத்தில் அவர்களது வீடே இரண்டாகப் பிரிந்து விட்டது. சமையல், படுக்கைய‌‌றை இரண்டானது... வீட்டு வாசல் இரண்டானது என அனைத்துமே இரண்டானது. யாரும் யாரையும் பார்த்துக் கொள்வதில்லை. பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் முகத்தினைத் திருப்பிக் கொண்டார்கள்.

Sunday, August 4, 2013

நீ ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா....?


வழமை போலவே அன்றும் தன் மனைவி பரிமளத்துக்கு கோல் எடுத்தார் அம்பலத்தார். அப்போது மற்றைய போனில் பரிமளம் கதைத்துக் கொண்டிருந்ததால் போனில் காத்திருந்தார் அம்பலத்தார். சொந்த மொழிக் காரன் ஒருவருடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பது தொடர்பாக ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

பரிமளத்துக்கு நம்பிக்கையுடன் ஆங்கிலம் கதைக்கத் தெரிந்திருந்தாலும், கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு விளங்குமோ என்னவோ.....? ஆனாலும் பரிமளம், தான் என்ன நினைத்தாளோ, அதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரிமளம், போனில் கஷ்ரப்பட்டு விளங்கப்படுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பலத்தார், அவள் தனது உரையாடலை முடித்து விட்டு கணவர் அம்பலத்தாருடன் கதைத்த போது,

"வீடு வாடகைக்கு எடுத்தல் தொடர்பாக கதைக்கும் போது எமது மொழிக் காரருடன் எமது மொழியிலேயே கதைப்பது நல்லது. ஆங்கிலத்தில் கதைத்தால், அவர்கள் உங்களை வெளிநாட்டவர் என நினைத்து வாடகையைக் கூட்டிச் சொல்வார்கள்......"

என்று சொன்னார்.

"முதலில் எங்கள் மொழியில் தான் கதைத்தேன். ஆனால் அவர் தான் ஆங்கிலத்தில் கதைத்தார். பின்னர் நான் தொடர்ந்து கதைத்தேன்"
என்றாள் பரிமளம்

" சரி..... சரி..... ஏதோ அவனுக்கு விளங்கப்படுத்த முயற்சிப்பது போலிருந்தது அது தான் சொன்னேன்....... அதை விட ஆசிய நாடுகளில், வெளிநாட்டுக்க காரர் என்றால், வாடகையைக் கூடச் சொல்லி வாங்குவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்..... அது தான் ....."
என்றார் அம்பலத்தார்.

" சரி கதையை விடுங்கோ.... அதெல்லாம் கதைச்சாச்சு..... நீங்கள் தேவையில்லாமல் இதுக்குள்ளை தலையை விடாதையுங்கோ..... இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்......."
என்று கோபமாகச் சொன்னாள் பரிமளம்.

Saturday, July 13, 2013

ஒரு தாயின் கனவு


" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது.

பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வேணும் முருகா.. ஜேசப்பா... !"

என்று ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம்.


அவளுக்கு மதி, கவி, பவி என்று மூன்று பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.

இவர்களில் மதி தான் மூத்தவள். கமலம் புலம்பிக் கொண்டிருந்ததும் இவளைப் பற்றித் தான்.


ஏனென்றால், அவளது இரண்டாவது மகள் கவி திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாட்டினது கொடூர யுத்தம், அவர்களது குடும்பத்தையே மதியிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தியது.


நீண்ட காலமாக குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாததால், தையல் கொம்பனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்து, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தாள் மதி.


நாட்டில் சமாதானம் நிலவி, போர் முடிவுக்கு வந்திருந்த போதும், மதி, தனது ஊருக்குச் சென்று, பெற்றோருடன் சேர்ந்திருப்பதற்கு, அந்த நாட்டின் பயங்கரவாதச் சட்டம், பயங்கரச் சட்டங்களாக, அவளை விடாது துரத்திக் கொண்டே இருந்தது.

அதனால் அவள் வேறு நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்து அகதியாக அடைக்கலம் கோரியிருந்தாள்.


ஆனாலும், அவள் தஞ்சம் கோரியிருந்த நாட்டின் சட்டங்களும் கொடுமையாகவே காணப்பட்டன. அந்தக் கொடுஞ்சட்டம் அவளையும் விடவில்லை. விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவள் மீதும் பாய்ந்து அழுத்தியது.


எப்போது அவளது விடுதலை என்று தெரியாது தவித்தாள். தத்தளித்தாள். தாய் கமலத்திடமும் சொல்லிப் புலம்பினாள். ஆனாலும் சட்டங்களுக்குத் தான் மனச்சாட்சி, கண் என்று எதுவும் இல்லையே. சாட்சிகள் என்று எதுவும் கிடைத்தால் போதுமே. அவை பொய்யானதாகவோ போலியானதாகவோ இருப்பதைப் பற்றிப் பிரச்சனை எதுவும் இல்லை.


தஞ்சம் கோரிய நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரை சாட்சியும் தேவையில்லை. விசாரணையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் சட்டமாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் சென்று தமக்கிழைக்கப்பட்ட அநியாயத் தீர்ப்புக்கு நியாயம் கேட்டு முறையிடுவதற்கு, சட்டம் இடம் கொடுக்கவில்லை.

Sunday, July 7, 2013

ஐஸ் பிரியாணி




" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்

. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு


. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்

அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.

அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர

12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.

Monday, July 1, 2013

தந்தையர் தினம்



"உங்களுடைய அப்பா என்ன வேலை? "

" Engineer..."

"உங்களுடைய அப்பா...?"

" Doctor...."

"உங்களது..."

" Teacher....."

"உங்களது..."

" He is in Home"

" No problem.... what was his job before "

" He always is in the house ...
Clean the Kitchen and house and washe the vessels..."

எல்லோரும் பெரிதாகவே சிரித்து அவனை சேலி செய்தார்கள்.

" உனது அப்பா என்ன சோம்பேறியா.....? இன்னும் ஏதேதோவெல்லாம் கேட்டு கேலி பண்ணினார்கள். அன்று முழுவதும் அவன் சோகமாகவே காணப்பட்டான்.


அன்று தந்தையர் தினம். அதனால் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தந்தையார் என்ன வேலை செய்கின்றார்கள் என்று கேட்டுக்கொண்டு வந்து, அபியிடம் கேட்ட போதே அவன் அந்தப் பதிலைச் சொன்னான்.

Saturday, June 15, 2013

மூத்தவன்.




" இதை ஏனணை வாங்கினியள்...?

எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...?

ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...?

உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...?

இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந்திருக்கிறியள்...

இது எனக்குப் பிடிக்வேல்ல...

எனக்கு வேண்ணடாம்......

உங்கட அடுத்த பிள்ளையளுக்குக் குடுங்கோ...

இனி எனக்கொண்டும் வாங்க வெண்டாம். சொல்லிப்போட்டன்...."


என்று அம்மாவைத் திட்டிக்கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டான் சிவாகரன்.


அன்னம்மாவோ எவ்வளவு ஆசையாக தான் உழைத்த பணத்தில் அவனுக்கென ஒரு சேட் எடுத்துக்கொடுக்க அவன் தாயாரைத் திட்டியதோடல்லாமல் அவளின் மனதையும் நோகடிக்கச் செய்து விட்டான். .


"உந்த வயலில, வெய்யில்ல, காஞ்சு, கூலிக்கு அரிவி வெட்டி, சூடடிச்சு ஆம்பிளை மாதிரி 40 பரப்பு வயல் விதைச்சு இப்படியெல்லாம் சேத்த காசில தான இவனப் படிப்பிச்சனான்.

படிப்பிக்கேக்க, அதுக்கு காசு, இதுக்கு காசு எண்டு 300/400 எண்டு கேக்கேக்க இந்த நாகரீகமெல்லாம் எங்க போனது...?

இப்பவும் அவன்ர உழைப்பில நான் வாங்கிக் குடுத்தனானோ...?

3 நாள் அரிவி வெட்டி, கூலி கிடைச்சாப் போல, பெரியவனுக்கு ஒரு சேட்டெடுப்பம் எண்டு எடுத்தன். அது பிழையோ...?

உவன் உந்தத் திட்டு திட்டிப் போட்டுப் போறான்...."

Saturday, June 8, 2013

நொந்து போன பிஞ்சு



காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பூங்கா, கவலையாகவே காணப்பட்டாள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கோ, பிள்ளை ஏன் கவலைப் படுகின்றாள் என்று தெரியாது தவித்துக் போனாள்.

பூங்காவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட கண்ணம்மா,

"ஏனம்மா கவலையாயிருக்கிறீங்கள்...?
உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அம்மா அப்பாவுக்குச் சொன்னால் தானே தெரியும்...?
பிள்ளை கவலையாயிருந்தால் அம்மாவுக்கும் தானே கவலையாயிருக்கும்...."
என்று கண் கலங்கினாள்.

அவளது கண் கலங்கியதும் அந்த எட்டு வயதேயான பிஞ்சு பூங்காவின் கண்கலங்கி கண்ணீர் வழிந்தோடியது. தாயின் கண் கலங்கக் கூடாது என்பதற்காக தனது கவலையைச் சொல்லத் தொடங்கினாள்.

" நான் நப்பிளான்ட் ரெஸ்ற் எழுத மாட்டேன் அம்மா..."
 என்றாள் பூங்கா

" ஏன் பிள்ளை எழுத மாட்டீங்கள்.....?
நீங்கள் எழுதி சித்தியடையாவிட்டாலும் பறவாயில்லை....
எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
ஆனால் பிள்ளை அந்த ரெஸ்ரை எழுதினால் தானே, அது கஸ்ரமானதா அல்லது சுலபமானதா என்று தெரியும்...?
அப்போ தானே அடுத்த ரெஸ்ருக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்...? "
என்றாள் தாய் கண்ணம்மா.

Monday, May 20, 2013

பாசத்துக்கு ஏங்கிய பாலன்


" அங்கை போகாதே ... அங்கே போனால் பேய் பிடிக்கும்..... "

என்று அவளது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சனசமூக நிலையத்துக்கு தனது மகன் பாலாவை போகவிடாது வெருட்டிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.

பாலாவுக்கு அப்போது தான் 2 வயது ஆகிக் கொண்டிருந்தது. அவனுக்கு 8 வயதில் அக்காவும் 5 வயதில் அண்ணாவும் இருந்தனர். பாலன் சரியான சுட்டிப் பயல். அவனுடைய சில வேடிக்கையான நடவடிக்கைகளை கண்ணம்மா அயலவர்களிடமும் காண்பவர்களுக்கும் சொல்லி மகிழ்வாள்.


யாராவது அவனது வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களுடன் பாலா ஒட்டிவிடுவான். அவர்கள் மீது பாசமழை பொழிந்து தன்னை அவர்கள் மறக்க முடியாத அளவுக்குச் செய்து விடுவான்.

Thursday, April 18, 2013

சாமிக்கு அப்பா இல்லையா?


டும் ..டும் ...டும் என்று எங்கு பார்த்தாலும் செல் சத்தங்களும் விமானக்குண்டு வீச்சுக்களும் டட் டட் டட் டட்.......என்று துப்பாக்கிச் சத்தங்களும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன.


சனங்களும் ஒவ்வொரு ஊர்களாக, ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனாலும் இராணுவ அணிகள் தொடர்ந்து மக்களது உயிர்களையும் பாராது குடியிருப்புக்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என அனைத்தின் மீதும் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றதோடல்லதமல் அவர்களை அவ்விடங்களில் இருந்து துரத்தியும் அடித்தன.


இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்களில் செத்தவர்கள் சாக, மற்றவர்கள் அஞ்சி ஓடி ஓய்ந்து ஓதங்கிய இடம் தான் முள்ளிவாய்க்கால். ஏலக்கூடியவர்கள் தொடர்ந்து ஓடுவதற்கு இடமிருந்தால் ஓடியிருப்பார்கள். ஆனால் அங்கு அவர்களை ஆர்ப்பரித்து வழிமறித்தது இந்து சமுத்திரம்.


சனம் எல்லாம் தங்களால் இயன்றவரை அந்த கடற்கரை மண்ணில் பங்கர் வெட்டி, கொழுத்தும் வெயிலில் இருந்து தம்மைக் காக்க அதன்

Sunday, February 24, 2013

ஆபத்தாக மாறிவிடும் அனுதாபங்கள்.



" கண்ணய்யா... நீங்கள் நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு வரவேண்டி இருக்கும். ஏனென்றால் 3000 இடியப்பம் ஓடர் வந்திருக்கிறது. காலை 7.30க்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். "

என்று கண்ணய்யாவுக்கு மறுநாளுக்கான வேலையை சொல்லிக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.


அது ஒரு பெரிய உணவு உற்பத்திக் கம்பனி. அதில் உடனடி இடியப்பம் தான் அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுகளில் ஸ்பெஷல். பல உணவகங்கள், திருமண வைபவங்கள், கோவில்கள், மற்றும் என்ன நிகழ்வுகள் எல்லாம் மதிய உணவு நேரம் தவிர்ந்த காலை , மாலை உணவு நேரங்களில் நடக்கின்றனவோ அவையெல்லாம் இவர்களிடம் தான் ஓடர் கொடுக்க வருவார்கள்.


ஒரு மணி நேரத்தில் 1000 இடியப்பங்களைப் பிழிந்து அவித்து விடக் கூடிய மெசினறியைக் கொண்டிருந்தது அந்தக் கம்பனி. இடியப்பத்தைக் கொடுக்கும் போது அதற்குரிய சாம்பார், சட்னியையும் கொடுக்கும் பொறுப்பும் இந்தக் கம்பனியுடையதே.


அதனால் தான் கஸ்தூரி அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

Monday, February 18, 2013

"சக்தி இன்றேல் சிவம் இல்லை"



சிவன் தனது உடலில் பாதியை தனது மனைவியான உமையம்மைக்குக் கொடுத்தார்.

மனைவி என்பவள்; பெண் என்பவள் சக்தி  என்று பொருள். அதனால் தான் "சக்தி இன்றேல் சிவம் இல்லை" என்று சித்தர் ஒருவர் சொன்னார்.

அது தான் ஒரு ஆண் திருமணத்திற்கு முன்னர் ஒரு கட்டுக்கடங்காத காளையாக எப்படியெல்லாமோ இருப்பார்.

ஆனால் அவனுக்கென்று ஒரு பெண் நிச்சயிக்கப்பட்ட பின்னர் அந்த ஆணில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அதாவது சக்தியின்றி இருந்த ஒரு மனிதனுக்கு மனைவி; பெண் எனும் வடிவில் சக்தி கிடைக்கின்றது.

Saturday, June 23, 2012

சந்தேகக் கோடுகள்.


தாரணி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் மயூரன்.
அவளது அறிவும், அழகும், நல்ல குணமும், துடுக்குத்தனமான
செல்லக் கதைகளுமே, அவளை அவன் காதலிப்பதற்கான உந்து
சக்தியாக அமைந்திருந்தன.

தன் கணவன், தன் பிள்ளை, தன்குடும்பம் என்ற பெண்களுக்கே
உரித்தான சுயநலமான எண்ணங்கள் தாரணிக்கும் அமைந்திருந்ததில்
வியப்பேதுமில்லை...

மயூரன் பெரிய கொம்பனி ஒன்றில் மனேஜராக பணியாற்றி வந்தான்.
ஆண், பெண் என்ற வேறுபாடின்றி பலருடன் பழக வேண்டிய
சந்தர்ப்பம் அவனுக்கு. ஏனெனில் அவனது வேலை அப்படி
இருந்தது.

இந்த வகையில் சுவிஸ், சூரிச்சில் உள்ள சொக்லட் கொம்பனியின்
விற்பனை முகாமையாளராக பணியாற்றி வந்த சாவித்திரி என்பவருடன்
வேலை ரீதியாக தொடர்பேற்பட்டது.

அவளது அறிவு, துடுக்குத்தனமான பேச்சுக்கள், சிறந்த முடிவெடுக்கும்
திறன், தொடர்பு பேணுதல் என்று அவளிடம் அனைத்தும் நிரம்பவே
இருந்தன. இந்தத்தொடர்பு நட்பாக, அண்ணன் தங்கையாக வளர்ந்தது.


சாவித்திரியின் சிறு வயதிலேயே சோகங்கள், துன்பங்கள், என்பன
பலவாறாக பாய்ந்து காயப்படுத்தியிருந்தன. தன் துன்பங்களை
சொல்லி ஆறுதலடைய ஏங்கிய சாவித்திரிக்கு, தட்டுப்பட்ட பாசமலர்
தான் மயூரன்.

தினமும் வேலைக்குச் செல்வதற்க்கு முன்னர் மெயில் பண்ணி சுகம்
விசாரிப்பது, நேரம் கிடைக்கும் போது கதைப்பது என அவர்களது
நட்பு வளர்ந்து வந்தது.

வேலை விட்டு வீட்டுக்குச் சென்றதும் சாவித்திரியைப் பற்றி
தாரணியிடம் சொல்லி கவலைப்படுவதே அவனது வேலையாக
இருந்தது.

சாவித்திரியின் சோகங்கள், திறமைகள் அனைத்தையும் தாரணிக்கு
சொல்லி கவலைப்படுவான் மயூரன். அவளுக்கு அது பிடிக்கவில்லை
என்றாலும், வெளியில் காட்டிக்கொள்ளாது, "ம்" என்று சொல்லிக்
கொண்டிருந்தாள் தாரணி.

Thursday, April 15, 2010

நா காக்க....!

சிறிது காலம் பழகினாலும் நிறைய நாட்கள்
பழகியது போன்ற புரிந்துணர்வைக் கொண்டிருந்தார்கள்
கவிதாவும் பிரியாவும்.

சாப்பிடுவதற்காக உணவகத்திற்கோ அல்லது
பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கோ விழையாடுவதற்கோ
எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே போவார்கள் வருவார்கள்.

எங்காவது ஓரிடத்தில் இருவரில் யாராவது ஒருவரைப்பார்த்தால்
மற்றவரும் அங்கிருப்பார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.
அந்தளவுக்கு ஆழமான நட்பாக இருந்தார்கள்.

அதைவிட இருவரும் என்ன இரட்டையர்களா என்று சக
நண்பர்களால் கேலி செய்யுமளவிற்கு அவர்களது நட்பு
இருந்தது.

இருவருடைய எண்ணங்களும் செய்கைகளும் தமது துன்பங்களை
பகிர்ந்த போது கிடைத்த ஆறுதல்களும் அவர்களை இரட்டையர்
களாக்கியதென்றால் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்களும்
இருக்காது.

இந்தக் காலப்பகுதியில் தான் சோபிதாவின் நட்பு பிரியாவுக்கு
கிடைக்கிறது. பிரியாவுக்கு கிடைத்தால் அது கவிதாவுக்கும்
கிடைத்தது போன்றது தானே. இருவருக்கும் நண்பியாகிறாள்
சோபிதா.

கவிதா பிரியா நட்பு சோபிதாவுக்கு எரிச்சலூட்டியது. தனது
சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் கவிதாவுடன் கலந்தாலோசித்து
பிரியா பதில் சொன்னது சோபிதாவுக்கு பிடிக்கவேயில்லை.
அதனால் இருவரையும் பிரிக்க சதித்திட்டம் தீட்டினாள்.

பிரியா கவிதா இருவரில் ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில்
மற்றவரைப்பற்றி குறை கூறி அவர்களிருவருக்குமிடையில்
வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை
எல்லாம் பயன்படுத்தினாள்.

இப்படி இல்லாத பொல்லாத் கதைகளையெல்லாம் ஒருவரைப்
பற்றி ஒருவரிடம் சொல்லி இருவருக்கும் சகுனியாக இருந்தாள்
சோபிதா.

சகுனியின் சதிக்கதைகளால் பிரியாவும் கவிதாவும் ஒருவரை
ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களை இயன்றவரை தவிர்த்து;க
கொண்டார்கள். எதிர்பாராத சந்திப்புக்களில் ஏனோ தானோ
என்று நலம் விசாரித்து நழுவினார்கள்.

ஒருநாள் பிரியாவும் சோபிதாவும் சதுரங்கம் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். இவ்விடத்தில் சோபிதாவிற்கு காய்களை
நகர்த்தும் ஐடியாக்களை சொல்லிக கொடுத்துக கொண்டிருந்தாள்
கவிதா.

இதனால் பிரியாவுக்கு தோல்விநிலையைக் காட்டிக்கொண்டு
இருந்தது. அத்துடன் அவளது ராணியை வெட்டும் சந்தர்ப்பம்
சோபிதாவுக்கு கிடைத்து வெட்டி விட்டாள்.

தனது ராணி வெட்டுப்பட்டதும் பிரியாவுக்கு கோபம் தலைக்கு
ஏறியது. கவிதாவுக்கு தாறுமாறாக என்ன பேசுகிறோம் எனறு
யோசிக்காமலே திட்டி விட்டாள்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய சோபிதா
"உனது நண்பி இப்படி உன்னைத் திட்டி விட்டாளே" என்று
சொல்லி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள்
கவிதாவுக்கு.

Friday, April 9, 2010

அடையாள அட்டை

"அம்மா நான் போட்டு வாறன்" என்று சொல்லி பதிலையும் எதிர்பாராமல்
காலையில் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ நேரமில்லாமல் தனது
சைக்கிளை எடுத்து வேகமாக மிதக்கத்தொடங்கினான் ரூபன். ஓடும் போது
மணியை ஒருமுறை பார்த்தான். மணி 7.53 ஐக் காட்டிக்கொண்டிருந்ததால்
சைக்கிளை மேலும் வேகமாக மிதிக்கத்தொடங்கினான்.

முதல்நாள் பள்ளிக்கூடத்தில் கணிதபாடத்தில் தந்த வீட்டுவேலையைச்
செய்யாததால் சுபத்திரா ரீச்சரிடம் அடி வாங்கியதும் பெண்கள் முன்
அவமானப் பட்டதுமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அதைவிட
அடுத்தநாள் செய்துவராவிட்டால் வகுப்பை விட்டே கலைத்துவிடுவேன்
என்று மிரட்;டியதே அன்று இரவு நீண்டநேரம் விழித்திருந்து வீட்டுவேலை
செய்யக் காரணமாக இருந்தது. செய்து முடித்து நித்திரையாக பின்னிரவு
2 மணியைத் தாண்டியிருந்தது. அதனால் காலையில் எழும்ப 7.20 ஆகி
விட்டிருந்தது.

இருப்பினும் உடன் எழுந்து அவசரமாக குளித்து நீலக்காற்சட்டையும்
வெள்ளைச்சேட்டும் அணிந்து முதல்நாள் விளையாடியதால் சப்பாத்தில்
படிந்திருந்த புளுதியையும் துடைத்து போடடுக்கொண்டு வேகவேகமாய்
ஓடிவந்ததை நினைத்தவன் சுபத்திரா ரீச்சரின் அடியால் அவமானப்படுவதை
விட இன்று அவசர அவசரமாக வெளிக்கிட்டு வியர்க்க விறுவிறுக்க
பள்ளிக்கூடம் போவது மேல் என்று மேலும் வேகமாக சைக்கிளை
மிதித்து ஆமிக்காம்ப் சந்திக்கு வந்து சேர்ந்தான்.

சந்தியில் வழமைக்கு மாறாக சனங்கள் வரிசையில் நிற்பதைப்பார்த்த
ரூபன் இன்று பள்ளக்கூடத்திற்கு 8.15 க்கிடையில் போய்ச்சேரலாமா?
என்ற சந்தேகத்துடன் சென்றாலும் தனக்கு தனது பள்ளிக்கூட யுனிபோம்
துணைபுரியும் என்ற் எண்ணத்துடன் ஆமிக்காரனுக்கு கிட்ட போனவன்
ஏமாந்தே போனான். வழமையாக அடையாள அட்டை கேட்காத ஆமிக்
காரன் அன்று கேட்டான்.

" மல்லி ஐ.சி யக் கண்ட..."
" பொட்டக் இண்ட சேர் மங் கனவா..."
" வெலாவ கியா... கண்ட.... இக்மண்ட...."

அடையாள அட்டையை தனது மணிபேசிலும் புத்தகப்பையிலும் மாறிமாறி
தேடியும் கிடைக்கவில்லை. எங்கு போயிருக்கும் என யோசிக்கும் போது
தான் முதல் நாள் பின்னேரம் அடையாள அட்டை இலக்கத்தினை விதா
னையாரிடம் பதிவதற்காக அப்பா வாங்கியதும் பின்னர் அவர் தந்த போது
வாங்கி மேசையி;ல் வைத்ததும் வரும்போது எடுக்க மறந்ததும் நினைவுக்கு
வரவே..

" சேர்..... மம அமத்தவுணா சேர்.... மகே ஐ.சி கெதரட்ட தியன்னே....
கெட்ட எனக்கொட்ட கேண்ட சேர்..... தங் வெலாவ கியா சேர்.....
மம ஸ்கூலட்ட யண்டோண சேர்.....'

"ஏமத.....? தம்ச ஸ்கூலட்ட யண்டோணத....? தம்ச தமாய் கொட்டி....
தம்ச தமாய் உதயட்ட வெடித்தியன்னே..."

என்று உறுக்கியவாறு அடிக்கப் போனான் அந்த ஆமிச்சிப்பாய். அந்த
அடியில் இருந்து லாவகமாக விலகிக் கொண்ட ரூபன்