"
உது
மாதிரியான விடயங்கள் தான்
எனக்கு எரிச்சலையும் கோபத்தையும்
கிளறுது....
நானே
கஸ்ரப்பட்டுத் தான் கேட்டுக்
கொண்டிருக்கிறன்........
பிறகு
வேலையாக இருக்கிறியோ..
சாப்பிட்டியோ
என்று கேட்டுக் கொண்டு...
ச்ச்செ......"
என்று
பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்
சூரியா,
தன்
கணவர் சந்திரனிடம்.
சந்திரன்
அகதியாக தஞ்சம் கோரி அவுஸ்ரேலியத்
தடுப்பு முகாமில் 3
வருடங்களுக்கு
மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றான்.
அரசாங்கத்தின்
நலன்புரி திட்டத்தின் கீழ்
உறவினர்களைத் தொடர்பு கொண்டு
கதைப்பதற்காக அவனுக்கு
வாரத்துக்கு 3
தொலைபேசி
அட்டைகள் வழங்கப்படுகின்றது.
அதன்
பிரகாரம் அவனது பெற்றோர்,
மனைவியின்
பெற்றோருக்கு வாரமொரு முறையும்
சூரியாவுக்கு தினமும் அவளது
நேரம் பிற்பகல் 7
மணிக்குத்
தொடர்பு கொள்ளுவான்.
அப்போது
அவனது நேரம் 10
மணியாகி
விடும் என்பதால் அவனது அறையில்
வசிப்பவர்கள் எல்லாம்
தூங்கிவிடுவார்கள்.
அவர்களது
நித்திரை கலைந்து விடக்கூடாது
என்பதற்பாக சற்று மெதுவாகவே
தொலைபேசியில் பேசுவான்
சந்திரன்.
அதேவேளை
அவனுக்கு வழங்கப்படும்
தொலைபேசி அட்டையும் மிகத்துல்லியமற்ற
சம்பாசனைகளையே அனுப்பும்.
அப்போது
கேட்பவரகளுக்கும் கொஞ்சம்
கஸ்ரமாகத் தான் இருக்கும்.
















