Thursday, October 31, 2013

THE BALD MAN AND THE FLY

A Fly settled on the head of a Bald Man and bit him.

In his eagerness to kill it, he hit himself a smart slap.

But the Fly escaped, and said to him in derision,

"You tried to kill me for just one little bite; what will you do to yourself now, for the heavy smack you have just given yourself?"

"Oh, for that blow I bear no grudge,"
he replied,

"for I never intended myself any harm; but as for you, you contemptible insect, who live by sucking human blood, I'd have borne a good deal more than that for the satisfaction of dashing the life out of you!"

From Aesop story

Monday, October 21, 2013

முதற் பயம்

" தம்பி இந்த தேத்தண்ணியைக் வயலுக்குக் கொண்டு போய் அம்மாக்களிட்ட குடுத்திட்டு வாறியோ.... அச்சாப்பிள்ளை...." என்று அப்போது தான் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு இருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போத்தலினுள் தேனீரை ஊற்றி மூடிக் கொண்டே என்னிடம் கேட்டாள் என் அக்கா.

நானும் வயலுக்குப் போய் அந்த பச்சைப் பசேல் என்ற நெல்வயலைப் பார்க்கும்ஆர்வத்தில் " ஓமோம் தாங்கோ கொண்டு போய் குடுக்கிறன்.." என்று வாங்கிக் கொண்டேன்.

அப்போது அக்கா " இண்டைக்கு களி வயலுக்குத் தான் புல்லுப் பிடுங்கப் போறதெண்டு அம்மா சொன்னவா. அங்கை போய்ப் பார். அங்கை இல்லையென்றால் பெரியக்காவின்ரை வயலுக்குப் போய்ப் பார்" என்று சொன்னாள்.

" ஓமோம் " என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வயலை நோக்கிப் பறந்தேன்.

எமது ஊர் ஓர் அழகான ஊர். எங்களது வீட்டிலிருந்த 200 மீற்றருக்கு முன்னாடி ஒரு கிலோ மிற்றர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தில் நெற்பயிர்ச செய்கை செய்வார்கள்.

இது மழை காலத்தில் மட்டும் அதாவது ஒரு போகம் மட்டுமே நெற்பயிற் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் வயல்வெளியில் வீசும் குளிர்காற்றை அனுபவிப்பதற்காகவும் அக்காற்றினில் அலை போன்று அசைந்தாடும் நெற்கதிரின் பச்சைப் பசேல் என்ற கண்ணுக்கு குளிற்சியான அவ் வண்ணத்தை ரசிப்பதற்காகவும் நான் அங்கு செல்ல ஆசைப்படுவேன்.

ஆனாலும் எனக்கு அப்போ சிறிய வயது என்பதால் மழை காலத்தில் வெளியில் சென்றால் வருத்தங்கள் வந்து விடும் என்று தாய்மை உள்ளத்தோடு கண்டிப்பாக வயல்வெளிக்குச் செல்ல அம்மா அனுமதிப்பதில்லை.

சில சமயங்களில் அம்மாவுக்குத் தெரியாத வகையில் ஓடிப் போய் வயல்க் காட்சிகளை ரசித்து விட்டு வந்து அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டதும் உண்டு.

எமது வீட்டினருகில் வயல் வெளியிருந்தும் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று பலமுறை ஏங்கியதும் உண்டு.

இப்படியான ஏங்கங்கள் இருந்த காலத்தில் தான் அக்காவும் அம்மாவுக்க தேனீர் கொண்டு சென்று கொடுக்குமாறு கூற சந்தோசத்தில் பறந்து வயல் வெளிக்கு வந்தேன்.

அக்கா சொன்ன களி வயலில் அம்மாக்கள் இல்லாதது எனக்கு மிக்க சந்தோசத்தைக் கொடுத்தது. ஏனென்றால் களிவயல் இருப்பது வீதியோரத்தில். ஆகையால் நான் தேனீரை அம்மாவிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுமாறு கூறி விடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் தான் சந்தோசத்துடன் வயல்களின் நடுவே இருந்த பெரியக்காவின் வயலை நாடிச் சென்றேன்.

அங்கே அம்மா, சித்தி, பெரியக்கா, பெரியண்ணா, ஐயா எல்லோரும் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மா, குட்டியக்கா தேத்தண்ணி தந்துவிட்டவா..." என்றேன்.

Tuesday, September 3, 2013

இருந்தும் இல்லாதவர்கள்


எனக்கு அம்மா இல்ல... …..........
அப்பா இல்ல.....................
அண்ணா இல்ல.................
யாருமே இல்ல...............
நான் ஏன் உயிரோட இருக்கணும்..............
நான் சாகப் போறன்.......................”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள் பொற்கொடி.

பொற்கொடிக்கு 21 வயது தான் ஆகிறது. செந்தளிப்பான, அழகான வட்ட முகம். நேர்த்தியாக வாரியிழுத்துப் பின்னப்பட்ட தலைமுடி, முத்துப் போன்ற பல்வரிகள் என அனைத்து அழகையும், அவளுக்குக் கொடுத்த இறைவன், அவளது வயது, உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் சற்று உருவத்தில் பெரிய உடலை அவளுக்கு கொடுத்திருந்தான்.

பொற்கொடி வீட்டில் ஒரே பொண்ணு. கடைசிப்பிள்ளையும் கூட. முத்த இருவரும் அண்ணன்கள். அவர்கள் இருவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு, தமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்றவாறு ஏனோ தானோ என்று இருந்தார்கள்.

இவளுக்கு 14 வயது இருக்கும் போது, தாயாருக்கும் தந்தையாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிறிய பிரச்சனை பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை சென்றது. பிறகென்ன? விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். நீதிமன்றம் இவர்கள் மீண்டும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக, ஒரு வருட கால அவகாசம் வழங்கி தீர்ப்பைத் தள்ளிப் போட்டது.

இந்த ஒருவருடத்தில் அவர்களது வீடே இரண்டாகப் பிரிந்து விட்டது. சமையல், படுக்கைய‌‌றை இரண்டானது... வீட்டு வாசல் இரண்டானது என அனைத்துமே இரண்டானது. யாரும் யாரையும் பார்த்துக் கொள்வதில்லை. பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் முகத்தினைத் திருப்பிக் கொண்டார்கள்.

Sunday, August 4, 2013

நீ ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா....?


வழமை போலவே அன்றும் தன் மனைவி பரிமளத்துக்கு கோல் எடுத்தார் அம்பலத்தார். அப்போது மற்றைய போனில் பரிமளம் கதைத்துக் கொண்டிருந்ததால் போனில் காத்திருந்தார் அம்பலத்தார். சொந்த மொழிக் காரன் ஒருவருடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பது தொடர்பாக ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

பரிமளத்துக்கு நம்பிக்கையுடன் ஆங்கிலம் கதைக்கத் தெரிந்திருந்தாலும், கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு விளங்குமோ என்னவோ.....? ஆனாலும் பரிமளம், தான் என்ன நினைத்தாளோ, அதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரிமளம், போனில் கஷ்ரப்பட்டு விளங்கப்படுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பலத்தார், அவள் தனது உரையாடலை முடித்து விட்டு கணவர் அம்பலத்தாருடன் கதைத்த போது,

"வீடு வாடகைக்கு எடுத்தல் தொடர்பாக கதைக்கும் போது எமது மொழிக் காரருடன் எமது மொழியிலேயே கதைப்பது நல்லது. ஆங்கிலத்தில் கதைத்தால், அவர்கள் உங்களை வெளிநாட்டவர் என நினைத்து வாடகையைக் கூட்டிச் சொல்வார்கள்......"

என்று சொன்னார்.

"முதலில் எங்கள் மொழியில் தான் கதைத்தேன். ஆனால் அவர் தான் ஆங்கிலத்தில் கதைத்தார். பின்னர் நான் தொடர்ந்து கதைத்தேன்"
என்றாள் பரிமளம்

" சரி..... சரி..... ஏதோ அவனுக்கு விளங்கப்படுத்த முயற்சிப்பது போலிருந்தது அது தான் சொன்னேன்....... அதை விட ஆசிய நாடுகளில், வெளிநாட்டுக்க காரர் என்றால், வாடகையைக் கூடச் சொல்லி வாங்குவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்..... அது தான் ....."
என்றார் அம்பலத்தார்.

" சரி கதையை விடுங்கோ.... அதெல்லாம் கதைச்சாச்சு..... நீங்கள் தேவையில்லாமல் இதுக்குள்ளை தலையை விடாதையுங்கோ..... இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்......."
என்று கோபமாகச் சொன்னாள் பரிமளம்.

Saturday, July 13, 2013

ஒரு தாயின் கனவு


" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது.

பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வேணும் முருகா.. ஜேசப்பா... !"

என்று ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம்.


அவளுக்கு மதி, கவி, பவி என்று மூன்று பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.

இவர்களில் மதி தான் மூத்தவள். கமலம் புலம்பிக் கொண்டிருந்ததும் இவளைப் பற்றித் தான்.


ஏனென்றால், அவளது இரண்டாவது மகள் கவி திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாட்டினது கொடூர யுத்தம், அவர்களது குடும்பத்தையே மதியிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தியது.


நீண்ட காலமாக குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாததால், தையல் கொம்பனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்து, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தாள் மதி.


நாட்டில் சமாதானம் நிலவி, போர் முடிவுக்கு வந்திருந்த போதும், மதி, தனது ஊருக்குச் சென்று, பெற்றோருடன் சேர்ந்திருப்பதற்கு, அந்த நாட்டின் பயங்கரவாதச் சட்டம், பயங்கரச் சட்டங்களாக, அவளை விடாது துரத்திக் கொண்டே இருந்தது.

அதனால் அவள் வேறு நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்து அகதியாக அடைக்கலம் கோரியிருந்தாள்.


ஆனாலும், அவள் தஞ்சம் கோரியிருந்த நாட்டின் சட்டங்களும் கொடுமையாகவே காணப்பட்டன. அந்தக் கொடுஞ்சட்டம் அவளையும் விடவில்லை. விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவள் மீதும் பாய்ந்து அழுத்தியது.


எப்போது அவளது விடுதலை என்று தெரியாது தவித்தாள். தத்தளித்தாள். தாய் கமலத்திடமும் சொல்லிப் புலம்பினாள். ஆனாலும் சட்டங்களுக்குத் தான் மனச்சாட்சி, கண் என்று எதுவும் இல்லையே. சாட்சிகள் என்று எதுவும் கிடைத்தால் போதுமே. அவை பொய்யானதாகவோ போலியானதாகவோ இருப்பதைப் பற்றிப் பிரச்சனை எதுவும் இல்லை.


தஞ்சம் கோரிய நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரை சாட்சியும் தேவையில்லை. விசாரணையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் சட்டமாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் சென்று தமக்கிழைக்கப்பட்ட அநியாயத் தீர்ப்புக்கு நியாயம் கேட்டு முறையிடுவதற்கு, சட்டம் இடம் கொடுக்கவில்லை.

Sunday, July 7, 2013

ஐஸ் பிரியாணி




" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்

. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு


. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்

அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.

அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர

12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.