Sunday, August 4, 2013

நீ ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா....?


வழமை போலவே அன்றும் தன் மனைவி பரிமளத்துக்கு கோல் எடுத்தார் அம்பலத்தார். அப்போது மற்றைய போனில் பரிமளம் கதைத்துக் கொண்டிருந்ததால் போனில் காத்திருந்தார் அம்பலத்தார். சொந்த மொழிக் காரன் ஒருவருடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பது தொடர்பாக ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

பரிமளத்துக்கு நம்பிக்கையுடன் ஆங்கிலம் கதைக்கத் தெரிந்திருந்தாலும், கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு விளங்குமோ என்னவோ.....? ஆனாலும் பரிமளம், தான் என்ன நினைத்தாளோ, அதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரிமளம், போனில் கஷ்ரப்பட்டு விளங்கப்படுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பலத்தார், அவள் தனது உரையாடலை முடித்து விட்டு கணவர் அம்பலத்தாருடன் கதைத்த போது,

"வீடு வாடகைக்கு எடுத்தல் தொடர்பாக கதைக்கும் போது எமது மொழிக் காரருடன் எமது மொழியிலேயே கதைப்பது நல்லது. ஆங்கிலத்தில் கதைத்தால், அவர்கள் உங்களை வெளிநாட்டவர் என நினைத்து வாடகையைக் கூட்டிச் சொல்வார்கள்......"

என்று சொன்னார்.

"முதலில் எங்கள் மொழியில் தான் கதைத்தேன். ஆனால் அவர் தான் ஆங்கிலத்தில் கதைத்தார். பின்னர் நான் தொடர்ந்து கதைத்தேன்"
என்றாள் பரிமளம்

" சரி..... சரி..... ஏதோ அவனுக்கு விளங்கப்படுத்த முயற்சிப்பது போலிருந்தது அது தான் சொன்னேன்....... அதை விட ஆசிய நாடுகளில், வெளிநாட்டுக்க காரர் என்றால், வாடகையைக் கூடச் சொல்லி வாங்குவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்..... அது தான் ....."
என்றார் அம்பலத்தார்.

" சரி கதையை விடுங்கோ.... அதெல்லாம் கதைச்சாச்சு..... நீங்கள் தேவையில்லாமல் இதுக்குள்ளை தலையை விடாதையுங்கோ..... இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்......."
என்று கோபமாகச் சொன்னாள் பரிமளம்.

Saturday, July 13, 2013

ஒரு தாயின் கனவு


" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது.

பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வேணும் முருகா.. ஜேசப்பா... !"

என்று ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம்.


அவளுக்கு மதி, கவி, பவி என்று மூன்று பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.

இவர்களில் மதி தான் மூத்தவள். கமலம் புலம்பிக் கொண்டிருந்ததும் இவளைப் பற்றித் தான்.


ஏனென்றால், அவளது இரண்டாவது மகள் கவி திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாட்டினது கொடூர யுத்தம், அவர்களது குடும்பத்தையே மதியிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தியது.


நீண்ட காலமாக குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாததால், தையல் கொம்பனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்து, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தாள் மதி.


நாட்டில் சமாதானம் நிலவி, போர் முடிவுக்கு வந்திருந்த போதும், மதி, தனது ஊருக்குச் சென்று, பெற்றோருடன் சேர்ந்திருப்பதற்கு, அந்த நாட்டின் பயங்கரவாதச் சட்டம், பயங்கரச் சட்டங்களாக, அவளை விடாது துரத்திக் கொண்டே இருந்தது.

அதனால் அவள் வேறு நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்து அகதியாக அடைக்கலம் கோரியிருந்தாள்.


ஆனாலும், அவள் தஞ்சம் கோரியிருந்த நாட்டின் சட்டங்களும் கொடுமையாகவே காணப்பட்டன. அந்தக் கொடுஞ்சட்டம் அவளையும் விடவில்லை. விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவள் மீதும் பாய்ந்து அழுத்தியது.


எப்போது அவளது விடுதலை என்று தெரியாது தவித்தாள். தத்தளித்தாள். தாய் கமலத்திடமும் சொல்லிப் புலம்பினாள். ஆனாலும் சட்டங்களுக்குத் தான் மனச்சாட்சி, கண் என்று எதுவும் இல்லையே. சாட்சிகள் என்று எதுவும் கிடைத்தால் போதுமே. அவை பொய்யானதாகவோ போலியானதாகவோ இருப்பதைப் பற்றிப் பிரச்சனை எதுவும் இல்லை.


தஞ்சம் கோரிய நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரை சாட்சியும் தேவையில்லை. விசாரணையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் சட்டமாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் சென்று தமக்கிழைக்கப்பட்ட அநியாயத் தீர்ப்புக்கு நியாயம் கேட்டு முறையிடுவதற்கு, சட்டம் இடம் கொடுக்கவில்லை.

Sunday, July 7, 2013

ஐஸ் பிரியாணி




" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்

. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு


. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்

அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.

அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர

12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.

Tuesday, July 2, 2013

திருப்தி கொள்




எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்.

எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகு



இறைவன் உனக்குக் கொடுத்த நேரம் சொற்பமே

அந்த நேரத்தினை பிரயோசனமாகப் பயன்படுத்து.



கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே

எதிர்காலத்தைப் பார்த்து ஏங்காதே



உனக்காக இறைவன் கொடுத்தது அவ்வளவே

கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக்கொள்



எதையும் தொடர்ந்து முயற்சி செய்

அந்தந்த நேரத்தில் அதன் பயன் கிடைக்கும்.



அனைவரிடமும் ஆலோசனையைப் பெற்றுக் கொள் - ஆனால்

ஆணித்தரமான முடிவை நீயே எடு



எப்போதும் உன்னருகில் நல்லவரை வைத்துக் கொள்

இல்லையேல் உனைச்சுற்றி கெட்டவர்கள் கூடுவர்

Monday, July 1, 2013

தந்தையர் தினம்



"உங்களுடைய அப்பா என்ன வேலை? "

" Engineer..."

"உங்களுடைய அப்பா...?"

" Doctor...."

"உங்களது..."

" Teacher....."

"உங்களது..."

" He is in Home"

" No problem.... what was his job before "

" He always is in the house ...
Clean the Kitchen and house and washe the vessels..."

எல்லோரும் பெரிதாகவே சிரித்து அவனை சேலி செய்தார்கள்.

" உனது அப்பா என்ன சோம்பேறியா.....? இன்னும் ஏதேதோவெல்லாம் கேட்டு கேலி பண்ணினார்கள். அன்று முழுவதும் அவன் சோகமாகவே காணப்பட்டான்.


அன்று தந்தையர் தினம். அதனால் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தந்தையார் என்ன வேலை செய்கின்றார்கள் என்று கேட்டுக்கொண்டு வந்து, அபியிடம் கேட்ட போதே அவன் அந்தப் பதிலைச் சொன்னான்.

Saturday, June 15, 2013

மூத்தவன்.




" இதை ஏனணை வாங்கினியள்...?

எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...?

ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...?

உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...?

இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந்திருக்கிறியள்...

இது எனக்குப் பிடிக்வேல்ல...

எனக்கு வேண்ணடாம்......

உங்கட அடுத்த பிள்ளையளுக்குக் குடுங்கோ...

இனி எனக்கொண்டும் வாங்க வெண்டாம். சொல்லிப்போட்டன்...."


என்று அம்மாவைத் திட்டிக்கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டான் சிவாகரன்.


அன்னம்மாவோ எவ்வளவு ஆசையாக தான் உழைத்த பணத்தில் அவனுக்கென ஒரு சேட் எடுத்துக்கொடுக்க அவன் தாயாரைத் திட்டியதோடல்லாமல் அவளின் மனதையும் நோகடிக்கச் செய்து விட்டான். .


"உந்த வயலில, வெய்யில்ல, காஞ்சு, கூலிக்கு அரிவி வெட்டி, சூடடிச்சு ஆம்பிளை மாதிரி 40 பரப்பு வயல் விதைச்சு இப்படியெல்லாம் சேத்த காசில தான இவனப் படிப்பிச்சனான்.

படிப்பிக்கேக்க, அதுக்கு காசு, இதுக்கு காசு எண்டு 300/400 எண்டு கேக்கேக்க இந்த நாகரீகமெல்லாம் எங்க போனது...?

இப்பவும் அவன்ர உழைப்பில நான் வாங்கிக் குடுத்தனானோ...?

3 நாள் அரிவி வெட்டி, கூலி கிடைச்சாப் போல, பெரியவனுக்கு ஒரு சேட்டெடுப்பம் எண்டு எடுத்தன். அது பிழையோ...?

உவன் உந்தத் திட்டு திட்டிப் போட்டுப் போறான்...."