Sunday, May 26, 2013

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பழமொழிகள்



1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.

2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.

3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி.

4. அளவான உறக்கம் வளமான வாழ்வு

5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.

6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.

7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.

8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு

9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.

10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.

Tuesday, May 21, 2013

உனைவிட இல்லை புதுமையே

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு

காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன்

துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே

உனைவிட இல்லை புதுமையே  

Monday, May 20, 2013

பாசத்துக்கு ஏங்கிய பாலன்


" அங்கை போகாதே ... அங்கே போனால் பேய் பிடிக்கும்..... "

என்று அவளது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சனசமூக நிலையத்துக்கு தனது மகன் பாலாவை போகவிடாது வெருட்டிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.

பாலாவுக்கு அப்போது தான் 2 வயது ஆகிக் கொண்டிருந்தது. அவனுக்கு 8 வயதில் அக்காவும் 5 வயதில் அண்ணாவும் இருந்தனர். பாலன் சரியான சுட்டிப் பயல். அவனுடைய சில வேடிக்கையான நடவடிக்கைகளை கண்ணம்மா அயலவர்களிடமும் காண்பவர்களுக்கும் சொல்லி மகிழ்வாள்.


யாராவது அவனது வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களுடன் பாலா ஒட்டிவிடுவான். அவர்கள் மீது பாசமழை பொழிந்து தன்னை அவர்கள் மறக்க முடியாத அளவுக்குச் செய்து விடுவான்.

Sunday, April 21, 2013

போக்குவீரா என் துன்பம்





காலை வணக்கம் சொல்லி என்னை

கட்டி அணைத்து உச்சி முகர்ந்து

எழுப்பி என்னைத் துாக்க வேண்டும்



குளிக்கும் போது முதுகு தேய்த்து

சோப்புப் போட்டு தண்ணீர் ஊற்றி

கழுவி என்னைத் துடைக்க வேண்டும்

Thursday, April 18, 2013

சாமிக்கு அப்பா இல்லையா?


டும் ..டும் ...டும் என்று எங்கு பார்த்தாலும் செல் சத்தங்களும் விமானக்குண்டு வீச்சுக்களும் டட் டட் டட் டட்.......என்று துப்பாக்கிச் சத்தங்களும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன.


சனங்களும் ஒவ்வொரு ஊர்களாக, ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனாலும் இராணுவ அணிகள் தொடர்ந்து மக்களது உயிர்களையும் பாராது குடியிருப்புக்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என அனைத்தின் மீதும் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றதோடல்லதமல் அவர்களை அவ்விடங்களில் இருந்து துரத்தியும் அடித்தன.


இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்களில் செத்தவர்கள் சாக, மற்றவர்கள் அஞ்சி ஓடி ஓய்ந்து ஓதங்கிய இடம் தான் முள்ளிவாய்க்கால். ஏலக்கூடியவர்கள் தொடர்ந்து ஓடுவதற்கு இடமிருந்தால் ஓடியிருப்பார்கள். ஆனால் அங்கு அவர்களை ஆர்ப்பரித்து வழிமறித்தது இந்து சமுத்திரம்.


சனம் எல்லாம் தங்களால் இயன்றவரை அந்த கடற்கரை மண்ணில் பங்கர் வெட்டி, கொழுத்தும் வெயிலில் இருந்து தம்மைக் காக்க அதன்

Sunday, April 14, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இன்றைய புத்தாண்டுத் திருநாளில்

அனைத்து வளங்களும் கிடைத்து

பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.