Friday, November 16, 2012

3. நீத்தார் பெருமை/THE MERIT OF ASCETICS


 
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

No merit can be held so high

As theirs who sense and self deny.



துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

To con ascetic glory here

Is to count the dead upon the sphere.



இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

No lustre can with theirs compare

Who know the right and virtue wear.



உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்

வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து

With hook of firmness to restrain

The senses five, is heaven to gain.



ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலும் கரி

Indra himself has cause to say

How great the power ascetics, sway.



செயற்குஅரிய செய்வார் பெரியர்,சிறியர்

செயற்குஅரிய செய்கலா தார்.

The small the paths of ease pursue

The great achieve things rare to do.



சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

They gain the world, who grasp and tell

Of taste, sight, hearing, touch and smell.



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

Full-worded men by what they say,

Their greatness to the world display.



குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

Their wrath, who've climb'd the mount of good

Though transient, cannot be withstood.



அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டுஒழுக லான்

With gentle mercy towards all,

The sage fulfils the virtue's call.

Wednesday, November 14, 2012

Happy Birthday My Soul


I may be far away like a hundred miles.

But at night when I dream,

you come so near.

Miss you,

for not being able to show my love on this day of the year.

Have a delightful birthday,

may all your wishes come true.

Saturday, November 10, 2012

வெற்றிக்கனிகள் பறிப்போம்.

எவனொருவன் ஒன்றை விரும்பி விட்டால்

அதனை தடுப்பதற்கு யாராலும் முடியாது - அணு

குண்டுதான் திடீரென வீழ்ந்தங்கு வெடித்தாலும்

தூளாகிப் போகுமது அவன்முயற்சியின் முன்னாலே.



எவற்றையும் மனதார விரும்பிநாம் ஆசைப்பட்டால்

எப்போதும் அவற்றையே உள்ளத்தில் நினைத்திருந்தால்

தானாக வந்துதிக்கும் பெரும்பெரும் ஐடியாக்கள்

தரமாக வடிவமைக்கும் அவ்வனைத்தையும் அடைவதற்கு.

Sunday, November 4, 2012

எமக்கு வாழ்வு கொடுங்கள்



எந்தனது மனைவியுடன் போன் பேசி

காலங்கள் கரைகிறது பல வாட்டி

பாலங்கள் இன்றி நான் தவிக்கின்றேன்

சாலங்கள் போட்டு அவளோடு சேர்ந்திருக்க



பெருங்கடல் ஒன்றெம்மைப் பிரிக்கிறது

சட்டங்கள் நாம்சேரத் தடுக்கிறது.

வருங்காலம் வாவென்று அழைக்கிறது

நேரங்கள் வருடங்களாய் பறக்கிறது.

Friday, October 19, 2012

உன்னால் மட்டும் எப்படி?





உலகினிலே

துன்பத்தில விழுந்த மனிதன்

அதிலிருந்து மீள்வதற்கு கஸ்ரப்படுகிறான்

இன்பத்தில் திளைத்த மனிதன்

மேலும் திளைக்க அவதிப்படுகிறான்.

பாடசாலை மாணவனோ

விரைவில் படித்து முடிக்க ஆசைப்படுகிறான்

வேலை செய்யும் ஆசிரியரோ

விரைவில் நிறைவுபெற வேண்டுகிறார்

வீட்டினிலே பெண்களோ

சுவையாக சமைக்க ஆசைப்படுகிறாள்

அவற்றைச் சாப்பிடுபவர்களோ

குறை கூறிச் சாப்பிடுகிறார்

எழுத்தாளன் எழுத நினைக்கிறான்

உழைப்பாளி உழைக்க நினைக்கிறான்

விவசாயி அறுவடை செய்ய நினைக்கிறான்

எல்லோருமே ஒவ்வொன்றை நினைக்கிறார்கள்

அதனை அடைந்து விட நினைக்கிறார்கள்

சிலர் நேரம் போதவில்லை என்கின்றனர்

பலர் நேரம் போகுதில்லை என்கின்றனர்.

ஆனால்

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது

எந்தவிதமான சலனமுமின்றி

பளிங்கில் வழிந்தோடும் நீர் போல

அமைதியாக

தெளிவாக

நகரமுடிகிறது....?

கற்றுத் தா எனக்கு

நிம்மதியைக் காண்பதற்கு.....!!!

Tuesday, October 16, 2012

வான்சிறப்பு/THE BLESSING OF RAIN



வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று

The genial rain ambrosia call;
The world but lasts while rain shall fall.

 
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்

தப்புஆய தூஉம் மழை

The rain begets the food we eat;
And forms a food and drink concrete.



விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து

உள்நின்று உடற்றும் பசி

Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth



ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளம்குன்றிக் கால்

Unless the fruitful shower descend,
The ploughman's sacred toils must end.



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Destruction it may sometimes pour,
But only rain can life restore.



விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

No grassy blade its head will rear,
if from the cloud no drop appear.



நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி

தான்நல்காது ஆகி விடின்

The ocean's wealth will wasre away,
Except the cloud its stores repay.



சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.



தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்.

Were heaven above to fail below,
Nor alms nor penance earth would show.



நிர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.  

Water is life that comes from rain
Sans rain our duties go in vain.