Saturday, March 29, 2008

நரக வாழ்க்கை வாழ்ந்து ஒருமாசத்திலேயே முடிஞ்சு போச்சு.....!



மனதுக்கு ஆறுதல் வேண்டி, ஆத்தோரம் ஒன்றிலே அமர்ந்து காற்று
வாங்கிக்கொண்டு, ஆற்றில் ஓடும் நீர் எவ்வளவோ ஆனந்தங்களில் சலசல கலகல என ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டும், நெருக்கி அடித்துக் கொண்டும் ஓடிக்கொண்டிருந்ததை, ரசித்துக்கொண்டிருந்தேன்.

ஆற்றில் ஓடும் சத்தத்தையூம் மீறி கலகல வென்ற
சிரிப்புச்சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை......
கனவா அல்லது நிஜமா என ஒருமுறை எனது உடம்பில்
கிள்ளிப்பார்த்தேன்.
ஆம் அது நிஜமே தான்.....
ஒரு குட்டித்தேவதை போன்ற
அழகான பெண்ணொருத்தி வானத்து நிலாவை பார்த்து கைகொட்டி தன்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
நானும் என்னத்தை பார்த்து சிரிக்கிறாள
என்பதை அறிய ஆவலாகி,
அவளருகில் சென்ற போது தான் புரிந்தது, அவள்
பதிவூ செய்யப்பட்ட நகைச்சுவைத்துணுக்குகளை கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளது சிரிப்பு, அழகு, சுட்டித்தனம், எல்லாமே ...
என்னை அவளது இடத்தை
விட்டு நகர மறுத்தது.
அவளுடன் பேசலாமா என யோசித்து விட்டு
பேசிப்பார்ப்போம்
என தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு பேசினேன்.

தங்கச்சி...........
ம்.......
எனக்கூறியவாறு அண்ணார்ந்து பார்த்து திரும்பினாள்.

Monday, March 24, 2008

எனக்கு வேண்டும் புது உறவு (வரவு)














உன்விழி
அசைவிலே
என்னிமை மூடுகின்றாய்
சொர்ப்பனத்தில் நீ வந்து
சொர்க்கங்கள் காட்டுகின்றாய்.

முத்தங்கள் தந்து நீ
மூச்சிரைக்க வைக்கின்றாய்.
பாலும் தேனும் தந்து நீ
வெறி பிடிக்க வைக்கின்றாய்.

என்னருகில் நீயிருந்து
சீராட்டி அணைக்கின்றாய்
உன்னணைப்பில் நானிருந்து
தவியாய் தவிக்கிறேன்...

உன்னை நினைத்து தினம்
கற்பனைகள் வளர்க்கின்றேன்
கனவு உலகினிலே
கண்டதயும் பிதற்றுகின்றேன்.

உனக்கும் கற்பனைகள்
தினமும் வருகிறதா?
தலையணை தான் உன்
இரவுத் துணைவனா?

தடையாக இருப்பதுவோ
தாலிக்கயிறு ஒன்று தானே
அதையும் கட்டி விட்டால்
அதிஸ்டக்காரன் நான் தானே.

தாலியை நான் கட்டி விட்டால்
நீ எனக்குச் சொந்தமடி
நீ எனக்குச் சொந்தமென்றால்
நானும் உனக்குச் சொந்தமடி.

தாலியை நான் கட்டி விட்டால்
வேலி போட யாருமில்லை
கிளிகள் கூடு தாண்டுமாப்போல்
விண்ணுயரப் பறந்திடலாம்.

நீ தான் என் வாழ்வில்
புதிய புது உறவு
உன்னால் எனக்கு வேணும்
புதிய புது வரவு......!

Monday, March 17, 2008

இது தான் காதலா?












உன்னை..

பார்த்தது முதல்,
ஒரு மாற்றம்,
எனக்குள்......!

என்னவென்று,
சொல்லத்தெரியவில்லை,
ஆனால் உணர்கிறேன்.
நினைத்துப்பார்க்கிறேன்,
அடிக்கடி உன்னை......!

அலை மோதுகின்றது, என்மனதில்,
நீ செய்த விளையாட்டுக்கள்.....!
செய்ய வந்த வேலை மறந்து,
மூழ்கிவிடுகிறேன், அவற்றிலே.......!

பைத்தியம் பிடித்தவன் போல,
பிதற்றுகின்றேன், ஏதேதோ.....!
இசையை, ரசித்து, முணுமுணுக்கிறேன்....
வாய்விட்டு, பாடுகிறேன், பாத்ரூமிலே.....!

சொல்லி சொல்லி, பார்க்கிறேன்,
உனது பெயரை......!
ஏன் இந்த மாற்றம்?
இதன் பெயர் தான் காதலா?

Sunday, March 16, 2008

என்னருகில் நீயிருந்தால்...

















என்னருகில்

நீ
இருந்த போது
என்னையறியாமலே

எனக்குள்
ஒரு திமிர் இருந்தது
என்னை
யாராலும்
அசைக்கமுடியாதென்று....

ஆனால்
நீ சற்று தூரம் சென்றதும் தான்
எனக்கு புரிகிறது

நீ
என்னருகில் இல்லை என்றால்
என்னை
அசைத்து
விடலாம் என்று......!

அன்பே
என்னருகில்
இரு..
நான்
நானாக
இருக்க.......

Saturday, March 15, 2008

ஓடிவாடி குட்டி.... என்னை கட்டி அணைக்க...........!


என்னவளே !

எப்போது
நான் உன்னை சந்தித்தேனோ
அப்போதிருந்து

நான்
நன்றாக நித்திரை அடிக்கிறேன்.
ஏனெனில்
எனது தலையில் இருந்த
சொல்ல முடியாத
ரகசியங்கள் எல்லாவற்றையூம்
சொல்லி FREE ஆகிட்டேன்
மறுபடி
இப்போ
நித்திரை வரவே மறுக்கிறது
உனது குசும்பு விளையாட்டுக்கள்
குதர்க்கப் பேச்சுக்கள்

செல்லக்கதைகள்

எல்லாம்
என் காதில் கிணுகிணுக்கின்றன.
உனது முத்தமின்றி
உதடுகள் காய்ந்து போகின்றன

உனது தரிசனமின்றி
கண்கள் மூடமறுத்து

சிவந்து போகின்றன

உனது அணைப்பின்றி
உடல் வெப்பம் குறைந்து

மைனஸ் டிகிறிக்கு போகின்றது.

உனது அன்பு வார்த்தைகளின்றி
காதுகள் அடைத்து
கேட்க மறுக்கின்றது
உனது சுவாசக்காற்று படாது
என் நெஞ்சு படபடத்து

ஏங்கி தவிக்கிறது.

எதற்கும்
ஒரு மாற்று வழி உண்டென்கிறார்கள்

உலகத்தார்.....

எனக்கு
அப்படி எதுவூம் வேண்டாம்.

நீதான்

எனக்கு
வேண்டும்
ஓடிவாடி குட்டி
என்னை கட்டி அணைக்க..........
உனது வரவை

வழிமேல் விழி வைத்து

காத்திருக்கிறேன்

சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு


காதலி
மீது சந்தேகம் கொள்பவன்
தன் மீது நம்பிக்கை இல்லாதவன்.

காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்

இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!!!!!!!


தன்மீது
நம்பிக்கை இல்லாதவர்கள்

காதலிக்க தொடங்குமுன்

சற்று யோசிப்பது நல்லது

காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி

இடையில் நின்று விட்டால்

சாக்கடை அதன் பெயர்.

பின்னர்

உயிர் வாழ்வதை விட
மூக்கடை
பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது
மாக்கடையில்
விற்கும்
பொருளல்ல......!