Tuesday, November 5, 2013
Sunday, November 3, 2013
குடும்பத்துக்கா பணத்துக்கா முன்னுரிமை?
சுபா தனது திருமணத்திற்காக குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்திருந்தாள். அங்கு வந்ததும் முதல் வேலையாக எல்லோருக்கும் தொடர்பு கொண்டு தனது திருமண விபரத்தைத் தெரிவித்தாள்.
அவ்வாறே சாம்பவிக்கும் சுபா தொடர்பு கொண்டு, " எனது திருமணம் இன்னும் இரு நாட்களில் நடைபெற இருக்கிறது. சித்தப்பாவிடம் சொல்லி விடுங்கள் " என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
சுபா, சாம்பவியின் கணவரின் அண்ணனின் மகள் ஆவாள்.
ஆனாலும் சாம்பவி தனது வேலை அசதியால் உடனடியாகத் தன் கணவனிடம் சொல்லாவிட்டாலும் மறு நாள் சொல்லி விட்டாள்.
ஆனாலும் சுபாவினது தொடர்பிலக்கத்தை குறித்து வைக்கவோ அல்லது அவளது தொலைபேசியில் சேமித்து வைக்கவோ நினைக்கவில்லை. ஏனென்றால் குடும்பத்தினர் தானே... பின்னரும் தொடர்பு கொள்வார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
மென்மேலும் வந்த தொடர்புகளால் சுபாவினது இலக்கம் தொலைபேசியில் இருந்து மறைந்து போய்விட்டது. ஏனென்றால் கடைசியாக உள்வந்த தொடர்புகளுக்கான 10 இலக்கங்களே சேமித்து வைக்கக்கூடியவாறு தொலைபேசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் மறுபக்கம் சுபாவோ, சித்தியிடம் சொல்லிவிட்ட பின்னரும் திருமணமாகி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் சித்தப்பா தனக்கு தொடர்பு கொண்டு வாழ்த்தவில்லையே என்று கோபத்தில் இருந்தாள்.
அவளது தொடர்பிலக்கம் தொலைபேசியில் இருந்து அழிந்து விட்டது என்பதும் சாம்பவியின் கவலையீனத்தால் நடந்தது என்பதும் சுபாவுக்குத் தெரியாது.
ஆனால் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து வந்த தொடர்புக்கு விடையளித்து விட்ட சாம்பவி முதல் வேலையாக அவ் வாடிக்கையாளரின் தொடர்பிலக்கத்தை தொலைபேசியில் இருந்து எழுதி விட்டு இலக்கங்கள் சரியாக எழுதப்பட்டுள்ளதா என்று ஒவ்வொரு இலக்கமாக பார்த்து மீள உறுதிப்படுத்திய பின்னரே மறு வேலை பார்த்தாள்.
பட்டியல் ;
காசே தான் கடவுளப்பா,
சிறுகதைகள்
Saturday, November 2, 2013
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
may the Divine light of Diwali
Shine with
Peace
Prosperity
Happiness
and Good Health
in your life.
Happy Diwali
Shine with
Peace
Prosperity
Happiness
and Good Health
in your life.
Happy Diwali
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும்
உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும்
எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
இன்றைய நன்னாளில்
தங்களைச் சூழ்ந்திருக்கும்
துன்பங்கள் மறைந்து
இன்பங்கள் சூழ
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
என்றும் அன்புடன்
சிவநாதன்.
பட்டியல் ;
வாழ்த்துக்கள்
Thursday, October 31, 2013
THE BALD MAN AND THE FLY
A Fly settled on the head of a Bald Man and bit him.
In his eagerness to kill it, he hit himself a smart slap.
But the Fly escaped, and said to him in derision,
"You tried to kill me for just one little bite; what will you do to yourself now, for the heavy smack you have just given yourself?"
"Oh, for that blow I bear no grudge,"
he replied,
"for I never intended myself any harm; but as for you, you contemptible insect, who live by sucking human blood, I'd have borne a good deal more than that for the satisfaction of dashing the life out of you!"
From Aesop story
In his eagerness to kill it, he hit himself a smart slap.
But the Fly escaped, and said to him in derision,
"You tried to kill me for just one little bite; what will you do to yourself now, for the heavy smack you have just given yourself?"
"Oh, for that blow I bear no grudge,"
he replied,
"for I never intended myself any harm; but as for you, you contemptible insect, who live by sucking human blood, I'd have borne a good deal more than that for the satisfaction of dashing the life out of you!"
From Aesop story
பட்டியல் ;
English,
படித்ததில் பிடித்தது
Monday, October 21, 2013
முதற் பயம்
" தம்பி இந்த தேத்தண்ணியைக் வயலுக்குக் கொண்டு போய் அம்மாக்களிட்ட குடுத்திட்டு வாறியோ.... அச்சாப்பிள்ளை...." என்று அப்போது தான் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு இருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போத்தலினுள் தேனீரை ஊற்றி மூடிக் கொண்டே என்னிடம் கேட்டாள் என் அக்கா.
நானும் வயலுக்குப் போய் அந்த பச்சைப் பசேல் என்ற நெல்வயலைப் பார்க்கும்ஆர்வத்தில் " ஓமோம் தாங்கோ கொண்டு போய் குடுக்கிறன்.." என்று வாங்கிக் கொண்டேன்.
அப்போது அக்கா " இண்டைக்கு களி வயலுக்குத் தான் புல்லுப் பிடுங்கப் போறதெண்டு அம்மா சொன்னவா. அங்கை போய்ப் பார். அங்கை இல்லையென்றால் பெரியக்காவின்ரை வயலுக்குப் போய்ப் பார்" என்று சொன்னாள்.
" ஓமோம் " என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வயலை நோக்கிப் பறந்தேன்.
எமது ஊர் ஓர் அழகான ஊர். எங்களது வீட்டிலிருந்த 200 மீற்றருக்கு முன்னாடி ஒரு கிலோ மிற்றர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தில் நெற்பயிர்ச செய்கை செய்வார்கள்.
இது மழை காலத்தில் மட்டும் அதாவது ஒரு போகம் மட்டுமே நெற்பயிற் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் வயல்வெளியில் வீசும் குளிர்காற்றை அனுபவிப்பதற்காகவும் அக்காற்றினில் அலை போன்று அசைந்தாடும் நெற்கதிரின் பச்சைப் பசேல் என்ற கண்ணுக்கு குளிற்சியான அவ் வண்ணத்தை ரசிப்பதற்காகவும் நான் அங்கு செல்ல ஆசைப்படுவேன்.
ஆனாலும் எனக்கு அப்போ சிறிய வயது என்பதால் மழை காலத்தில் வெளியில் சென்றால் வருத்தங்கள் வந்து விடும் என்று தாய்மை உள்ளத்தோடு கண்டிப்பாக வயல்வெளிக்குச் செல்ல அம்மா அனுமதிப்பதில்லை.
சில சமயங்களில் அம்மாவுக்குத் தெரியாத வகையில் ஓடிப் போய் வயல்க் காட்சிகளை ரசித்து விட்டு வந்து அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டதும் உண்டு.
எமது வீட்டினருகில் வயல் வெளியிருந்தும் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று பலமுறை ஏங்கியதும் உண்டு.
இப்படியான ஏங்கங்கள் இருந்த காலத்தில் தான் அக்காவும் அம்மாவுக்க தேனீர் கொண்டு சென்று கொடுக்குமாறு கூற சந்தோசத்தில் பறந்து வயல் வெளிக்கு வந்தேன்.
அக்கா சொன்ன களி வயலில் அம்மாக்கள் இல்லாதது எனக்கு மிக்க சந்தோசத்தைக் கொடுத்தது. ஏனென்றால் களிவயல் இருப்பது வீதியோரத்தில். ஆகையால் நான் தேனீரை அம்மாவிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுமாறு கூறி விடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் தான் சந்தோசத்துடன் வயல்களின் நடுவே இருந்த பெரியக்காவின் வயலை நாடிச் சென்றேன்.
அங்கே அம்மா, சித்தி, பெரியக்கா, பெரியண்ணா, ஐயா எல்லோரும் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மா, குட்டியக்கா தேத்தண்ணி தந்துவிட்டவா..." என்றேன்.
நானும் வயலுக்குப் போய் அந்த பச்சைப் பசேல் என்ற நெல்வயலைப் பார்க்கும்ஆர்வத்தில் " ஓமோம் தாங்கோ கொண்டு போய் குடுக்கிறன்.." என்று வாங்கிக் கொண்டேன்.
அப்போது அக்கா " இண்டைக்கு களி வயலுக்குத் தான் புல்லுப் பிடுங்கப் போறதெண்டு அம்மா சொன்னவா. அங்கை போய்ப் பார். அங்கை இல்லையென்றால் பெரியக்காவின்ரை வயலுக்குப் போய்ப் பார்" என்று சொன்னாள்.
" ஓமோம் " என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வயலை நோக்கிப் பறந்தேன்.
எமது ஊர் ஓர் அழகான ஊர். எங்களது வீட்டிலிருந்த 200 மீற்றருக்கு முன்னாடி ஒரு கிலோ மிற்றர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தில் நெற்பயிர்ச செய்கை செய்வார்கள்.
இது மழை காலத்தில் மட்டும் அதாவது ஒரு போகம் மட்டுமே நெற்பயிற் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் வயல்வெளியில் வீசும் குளிர்காற்றை அனுபவிப்பதற்காகவும் அக்காற்றினில் அலை போன்று அசைந்தாடும் நெற்கதிரின் பச்சைப் பசேல் என்ற கண்ணுக்கு குளிற்சியான அவ் வண்ணத்தை ரசிப்பதற்காகவும் நான் அங்கு செல்ல ஆசைப்படுவேன்.
ஆனாலும் எனக்கு அப்போ சிறிய வயது என்பதால் மழை காலத்தில் வெளியில் சென்றால் வருத்தங்கள் வந்து விடும் என்று தாய்மை உள்ளத்தோடு கண்டிப்பாக வயல்வெளிக்குச் செல்ல அம்மா அனுமதிப்பதில்லை.
சில சமயங்களில் அம்மாவுக்குத் தெரியாத வகையில் ஓடிப் போய் வயல்க் காட்சிகளை ரசித்து விட்டு வந்து அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டதும் உண்டு.
எமது வீட்டினருகில் வயல் வெளியிருந்தும் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று பலமுறை ஏங்கியதும் உண்டு.
இப்படியான ஏங்கங்கள் இருந்த காலத்தில் தான் அக்காவும் அம்மாவுக்க தேனீர் கொண்டு சென்று கொடுக்குமாறு கூற சந்தோசத்தில் பறந்து வயல் வெளிக்கு வந்தேன்.
அக்கா சொன்ன களி வயலில் அம்மாக்கள் இல்லாதது எனக்கு மிக்க சந்தோசத்தைக் கொடுத்தது. ஏனென்றால் களிவயல் இருப்பது வீதியோரத்தில். ஆகையால் நான் தேனீரை அம்மாவிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுமாறு கூறி விடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் தான் சந்தோசத்துடன் வயல்களின் நடுவே இருந்த பெரியக்காவின் வயலை நாடிச் சென்றேன்.
அங்கே அம்மா, சித்தி, பெரியக்கா, பெரியண்ணா, ஐயா எல்லோரும் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மா, குட்டியக்கா தேத்தண்ணி தந்துவிட்டவா..." என்றேன்.
பட்டியல் ;
சிறுகதைகள்
Tuesday, September 3, 2013
இருந்தும் இல்லாதவர்கள்
அப்பா இல்ல.....................
அண்ணா இல்ல.................
யாருமே இல்ல...............
நான் ஏன் உயிரோட இருக்கணும்..............
நான் சாகப் போறன்.......................”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள் பொற்கொடி.
பொற்கொடிக்கு 21 வயது தான் ஆகிறது. செந்தளிப்பான, அழகான வட்ட முகம். நேர்த்தியாக வாரியிழுத்துப் பின்னப்பட்ட தலைமுடி, முத்துப் போன்ற பல்வரிகள் என அனைத்து அழகையும், அவளுக்குக் கொடுத்த இறைவன், அவளது வயது, உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் சற்று உருவத்தில் பெரிய உடலை அவளுக்கு கொடுத்திருந்தான்.
பொற்கொடி வீட்டில் ஒரே பொண்ணு. கடைசிப்பிள்ளையும் கூட. முத்த இருவரும் அண்ணன்கள். அவர்கள் இருவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு, தமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்றவாறு ஏனோ தானோ என்று இருந்தார்கள்.
இவளுக்கு 14 வயது இருக்கும் போது, தாயாருக்கும் தந்தையாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிறிய பிரச்சனை பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை சென்றது. பிறகென்ன? விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். நீதிமன்றம் இவர்கள் மீண்டும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக, ஒரு வருட கால அவகாசம் வழங்கி தீர்ப்பைத் தள்ளிப் போட்டது.
இந்த ஒருவருடத்தில் அவர்களது வீடே இரண்டாகப் பிரிந்து விட்டது. சமையல், படுக்கையறை இரண்டானது... வீட்டு வாசல் இரண்டானது என அனைத்துமே இரண்டானது. யாரும் யாரையும் பார்த்துக் கொள்வதில்லை. பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் முகத்தினைத் திருப்பிக் கொண்டார்கள்.
பட்டியல் ;
குத்தூசி,
சிறுகதைகள்
Subscribe to:
Comments (Atom)



