Sunday, July 7, 2013

ஐஸ் பிரியாணி




" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்

. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு


. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்

அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.

அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர

12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.

Tuesday, July 2, 2013

திருப்தி கொள்




எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்.

எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகு



இறைவன் உனக்குக் கொடுத்த நேரம் சொற்பமே

அந்த நேரத்தினை பிரயோசனமாகப் பயன்படுத்து.



கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே

எதிர்காலத்தைப் பார்த்து ஏங்காதே



உனக்காக இறைவன் கொடுத்தது அவ்வளவே

கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக்கொள்



எதையும் தொடர்ந்து முயற்சி செய்

அந்தந்த நேரத்தில் அதன் பயன் கிடைக்கும்.



அனைவரிடமும் ஆலோசனையைப் பெற்றுக் கொள் - ஆனால்

ஆணித்தரமான முடிவை நீயே எடு



எப்போதும் உன்னருகில் நல்லவரை வைத்துக் கொள்

இல்லையேல் உனைச்சுற்றி கெட்டவர்கள் கூடுவர்

Monday, July 1, 2013

தந்தையர் தினம்



"உங்களுடைய அப்பா என்ன வேலை? "

" Engineer..."

"உங்களுடைய அப்பா...?"

" Doctor...."

"உங்களது..."

" Teacher....."

"உங்களது..."

" He is in Home"

" No problem.... what was his job before "

" He always is in the house ...
Clean the Kitchen and house and washe the vessels..."

எல்லோரும் பெரிதாகவே சிரித்து அவனை சேலி செய்தார்கள்.

" உனது அப்பா என்ன சோம்பேறியா.....? இன்னும் ஏதேதோவெல்லாம் கேட்டு கேலி பண்ணினார்கள். அன்று முழுவதும் அவன் சோகமாகவே காணப்பட்டான்.


அன்று தந்தையர் தினம். அதனால் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தந்தையார் என்ன வேலை செய்கின்றார்கள் என்று கேட்டுக்கொண்டு வந்து, அபியிடம் கேட்ட போதே அவன் அந்தப் பதிலைச் சொன்னான்.

Saturday, June 15, 2013

மூத்தவன்.




" இதை ஏனணை வாங்கினியள்...?

எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...?

ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...?

உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...?

இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந்திருக்கிறியள்...

இது எனக்குப் பிடிக்வேல்ல...

எனக்கு வேண்ணடாம்......

உங்கட அடுத்த பிள்ளையளுக்குக் குடுங்கோ...

இனி எனக்கொண்டும் வாங்க வெண்டாம். சொல்லிப்போட்டன்...."


என்று அம்மாவைத் திட்டிக்கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டான் சிவாகரன்.


அன்னம்மாவோ எவ்வளவு ஆசையாக தான் உழைத்த பணத்தில் அவனுக்கென ஒரு சேட் எடுத்துக்கொடுக்க அவன் தாயாரைத் திட்டியதோடல்லாமல் அவளின் மனதையும் நோகடிக்கச் செய்து விட்டான். .


"உந்த வயலில, வெய்யில்ல, காஞ்சு, கூலிக்கு அரிவி வெட்டி, சூடடிச்சு ஆம்பிளை மாதிரி 40 பரப்பு வயல் விதைச்சு இப்படியெல்லாம் சேத்த காசில தான இவனப் படிப்பிச்சனான்.

படிப்பிக்கேக்க, அதுக்கு காசு, இதுக்கு காசு எண்டு 300/400 எண்டு கேக்கேக்க இந்த நாகரீகமெல்லாம் எங்க போனது...?

இப்பவும் அவன்ர உழைப்பில நான் வாங்கிக் குடுத்தனானோ...?

3 நாள் அரிவி வெட்டி, கூலி கிடைச்சாப் போல, பெரியவனுக்கு ஒரு சேட்டெடுப்பம் எண்டு எடுத்தன். அது பிழையோ...?

உவன் உந்தத் திட்டு திட்டிப் போட்டுப் போறான்...."

Saturday, June 8, 2013

நொந்து போன பிஞ்சு



காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பூங்கா, கவலையாகவே காணப்பட்டாள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கோ, பிள்ளை ஏன் கவலைப் படுகின்றாள் என்று தெரியாது தவித்துக் போனாள்.

பூங்காவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட கண்ணம்மா,

"ஏனம்மா கவலையாயிருக்கிறீங்கள்...?
உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அம்மா அப்பாவுக்குச் சொன்னால் தானே தெரியும்...?
பிள்ளை கவலையாயிருந்தால் அம்மாவுக்கும் தானே கவலையாயிருக்கும்...."
என்று கண் கலங்கினாள்.

அவளது கண் கலங்கியதும் அந்த எட்டு வயதேயான பிஞ்சு பூங்காவின் கண்கலங்கி கண்ணீர் வழிந்தோடியது. தாயின் கண் கலங்கக் கூடாது என்பதற்காக தனது கவலையைச் சொல்லத் தொடங்கினாள்.

" நான் நப்பிளான்ட் ரெஸ்ற் எழுத மாட்டேன் அம்மா..."
 என்றாள் பூங்கா

" ஏன் பிள்ளை எழுத மாட்டீங்கள்.....?
நீங்கள் எழுதி சித்தியடையாவிட்டாலும் பறவாயில்லை....
எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
ஆனால் பிள்ளை அந்த ரெஸ்ரை எழுதினால் தானே, அது கஸ்ரமானதா அல்லது சுலபமானதா என்று தெரியும்...?
அப்போ தானே அடுத்த ரெஸ்ருக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்...? "
என்றாள் தாய் கண்ணம்மா.

Wednesday, June 5, 2013

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணு நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே