"உங்களுடைய அப்பா என்ன வேலை? "
" Engineer..."
"உங்களுடைய அப்பா...?"
" Doctor...."
"உங்களது..."
" Teacher....."
"உங்களது..."
" He is in Home"
" No problem.... what was his job before "
" He always is in the house ...
Clean the Kitchen and house and washe the vessels..."
எல்லோரும் பெரிதாகவே சிரித்து அவனை சேலி செய்தார்கள்.
" உனது அப்பா என்ன சோம்பேறியா.....? இன்னும் ஏதேதோவெல்லாம் கேட்டு கேலி பண்ணினார்கள். அன்று முழுவதும் அவன் சோகமாகவே காணப்பட்டான்.
அன்று தந்தையர் தினம். அதனால் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தந்தையார் என்ன வேலை செய்கின்றார்கள் என்று கேட்டுக்கொண்டு வந்து, அபியிடம் கேட்ட போதே அவன் அந்தப் பதிலைச் சொன்னான்.



