ஊர் உலகம் கூட்டிச் சென்று
உன்னோடு நான் ஒன்றி இருந்து
ஊஞ்சலாடி மகிழ்வது எப்போது?
காலம் கரைகிறது தன் பாட்டில்
கயவர்கள் இருக்கிறார்கள் அவர் பாட்டில்
நாங்களும் இருக்கிறோம் எம் நாட்டில்
எப்போது கூடுவது நாம் ஒரு கூட்டில்?
கடவுளும் திறக்கவில்லை தன் கண்களை
முப்பொழுதும் தொழுகிறோம் அவர்களை
எப்போதும் நினைக்கவில்லை எங்களை
புகழ்கிறார்கள் மேன்(மென்)மையாக தங்களை.
நாம் இன்னும் நம்புகின்றோம் உம்மை
காத்துவிடும் என்றென்றும் எம்மை
சாத்துவோம் உமக்கு என்றும் மாலை
போற்றுவோம் எப்போதும் எம் வாழ்வில்!.






.jpg)
