Monday, April 12, 2010

Hail or Fail

The people are living civil!
To military, they have to hail!
If not they have to go to jail!
Therefore their life will be fail!
Ethnics were living together like as finger and nail!
But government have not treated them equal!
They sent to government about that many mail1
But all mails had gone to pail!
Therefore they had got wail!
Their tragedy all have been veil!
Then the people were sent to the world a rail!
But they also give people ail!
Therefore they have come to Aussy by sail!
If the people would exile,
They want to go again jail!
Their life will become again fail!

அம்மா

பச்சைக் குழந்தை முதல்
வெள்ளைக் காரன் வரை
இச்சையுடன் உச்சரிக்கும்
உச்ச வார்த்தை.

வெள்ளை மனத்துடன்
பிள்ளை உளமறிந்து
முலையினால் பாலூட்டி
கலைப்பாள் பசியை.

கலையைக் கையில் காட்டி
தலை வருடி ஆசையுடன்
உச்சி மோந்து உம்மாக் கொடுத்து
"அ" னா சொல்லி தமிழைப்பழக்கி
சமூகத்தின் கையில் தவழக்கொடுத்தவள்.

சம்மாலம் கொட்டி
சக்கைப்பணிய உட்கார்ந்து
சேலைத் தலைப்பினுள் தன்
நூலை வளர்த்திப் போர்த்து

குளிரேதுமின்றி
களிப்பாகத் தூங்கவைத்து
விழித்திருப்பாள் அன்னை
கழித்திருப்பாள் பிள்ளைக்காக
தன் காலமெல்லாம்.

சேயின் செல்லக் கதை கேட்டு
தாயின் உள்ளம் மகிழும்
வாயில் போடும் சனமென்று
காய்ந்த மிளகாய் தீயில் போட்டு
தீயவைப்பாள் கண்ணூறு கழிய.

பிள்ளையின் நலத்துக்காக
தன்னையே உருக்கித் தவமிருந்து
எந்தை எம் பிரானைப் பிரார்த்தித்து
சிந்தையில் வைத்திருப்பாள்
விந்தையாக...!!

Sunday, April 11, 2010

ஏன் எம்மைக் காக்கவில்லை?




நல்லூரில் வீற்றிருக்கும் கந்தனே முருகா

உள்ளுரில் சுற்றியிருக்கும் சண்டைகளைய வாவா

தமிழூரில் பற்றியிருக்கும் தமிழடக்கு முறைகளை

அள்ளுரில் கோட்டு நசுக்கிவிட வாவா


எறிகணை கொண்டு பறிக்கிறார் எம்முயிரை

பறிகளும் இன்றிநாம் பரந்து திரிகின்றோம்.

சொறிகளும் விடவில்லை துரத்துது எம்மை.

கரிக்குது நாக்கு கடிக்க ஏதுமின்றி.

Saturday, April 10, 2010

உலகறிய உரை

பிறக்கும்முன்பு கருவறையில் பத்துமாதம் சிறை
இறந்தபின்பு தரையிலுடல் உக்கும்வரை சிறை
இதைஅனைவர் அறிதெளிய உலகமெலாம் பறை
இனியாவது திருந்தட்டும் அவரிலுள்ள குறை.

பயமின்றி செய்கிறார்கள் பெரும்பெரும் கறை
அதைமறைக்க வாளெடுத்து இடுகிறார்கள் உறை
இதுதெரிந்தும் கீழிருக்குமுன் நெஞ்சிலில்லையோ மறை
அவர்கையை எடுத்துவைத்து மரத்தில்வைத்து தறை

அவரிருந்தும் எமக்கு கிடைக்கவில்லை ஒரு கரை
அமைச்சராகி ஆரவாரமாய் அமர்ந்திருந்த வரை
நாம்செய்தோம் வேலையின்றி அப்பூனைகளுக்கு சிரை
இதையெடுத்து உலகறிய ஒவ்வொறுவறுக்கும் உரை.

நான் தான் உங்கள்பிரதியென்று பிச்சை வாங்கும் துரை
வரமாட்டார் அதன்பின்னரெம் தலையில்விழுந்தாலும் நரை
அடுத்ததடவை அவர்வந்தால் தெருநாய்போல் குரை
அவரைப்போட்டு உடைத்துவிடு நடுத்தெருவில்காய்ச் சுரை

எமக்கென்று நிலம்காண உறுதிகொண்டு விரை
உறுதிகொண்டு ஆகிவிடு விவேகம் கொண்ட மரை
அடுக்கடுக்காய் நின்றுகாட்டு எதிரிக்கு உன் நிரை
கிழிந்தவலை பின்னுவது போல் எதிரியைவைத்துப் புரை.

கௌரவம் ஆடம்பரம் நீக்கு அந்தத் திரை
அவற்றையெல்லாம் கட்டுபல சாக்குசாக்காய் சரை
கொண்டுசென்று எறிந்துவிடு கடலில்கிளம்ப நுரை
அனைத்தும் தொலைஞ்சு போச்சுதென்று உன்மனது நிறை

உன்னைநீ வளர்த்துக்கொள் ஒருபெருந் துறை
அதனால்நீ சேர்த்துவிடு என்றுமழியாத் திறை
எல்லோருக்கும் அந்தமர்மம் சொல்லுஒரு முறை
அவர்வலர்ந்து வந்துவிட்டால் உன் பெருமையெண்ணி நிறை.

Friday, April 9, 2010

என் கனவுக்கன்னி


உன்
கருவிழித் தூண்டலிலே
கருக்கட்டியது என் காதல்.
மெருகூட்டி உருவாக்கி
தருவாக்கினேன் நான்.

உன் பார்வை வீச்சினிலே
என் பாவை சிக்கியது.
விண் உயர மூச்சொன்று
வீசி விட்டு அடங்கியது.

என் கனவுக் கன்னியென
உன்னை நான் வரித்துக் கொண்டேன்.
எந்நாளும் உன்னை நான்
கனவினிலே கண்டு வந்தேன்

உன் மீது ஆசைகள்
பன்மடங்கு வளர்த்து வந்தேன்.
கன்னத்திலே முத்தம் உனக்கு
கனவினிலே இட்டு வந்தேன்.

இப்போதும் துள்ளிக் குதிக்குதடி ஆசைகள்
எப்போதும் நான் வந்து உன்னுடன் இருப்பதற்கு.
பற்பல கனவுக்ள... விதம் விதமாக..
சொல்லவும் வேண்டுமோ வாலிபக் கனவுகளை.

காற்றாக வந்து கசமுசா செய்கின்றாய்
போர்வையுள் புகுந்து பூராயம் காட்டுகின்றாய்.
வேர்வையில் என்னை நனைத்தே விடுகின்றாய்
பார்வையில் எல்லாம் பகல்க் கனவாக..

கத்திக் கத்தி தொண்டைத் தண்ணி வற்ற
பித்துப் பிடித்து பேயாய் அலைகின்றேன்.
பத்துப் பத்தாய் வயதுகள் தாண்டி
மொத்தமாய் முப்பது முடிஞ்சு போச்சடி.

காட்டமாய் நானுன்னை கட்டி அணைக்க
வட்டமாய் நீயும் வளைந்து தாடி
திட்டமாய் நீயென்னை அழைத்துப் போக
கூட்டமாய் வாடி என்னைக் கூட்டிப்போக..

அடையாள அட்டை

"அம்மா நான் போட்டு வாறன்" என்று சொல்லி பதிலையும் எதிர்பாராமல்
காலையில் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ நேரமில்லாமல் தனது
சைக்கிளை எடுத்து வேகமாக மிதக்கத்தொடங்கினான் ரூபன். ஓடும் போது
மணியை ஒருமுறை பார்த்தான். மணி 7.53 ஐக் காட்டிக்கொண்டிருந்ததால்
சைக்கிளை மேலும் வேகமாக மிதிக்கத்தொடங்கினான்.

முதல்நாள் பள்ளிக்கூடத்தில் கணிதபாடத்தில் தந்த வீட்டுவேலையைச்
செய்யாததால் சுபத்திரா ரீச்சரிடம் அடி வாங்கியதும் பெண்கள் முன்
அவமானப் பட்டதுமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அதைவிட
அடுத்தநாள் செய்துவராவிட்டால் வகுப்பை விட்டே கலைத்துவிடுவேன்
என்று மிரட்;டியதே அன்று இரவு நீண்டநேரம் விழித்திருந்து வீட்டுவேலை
செய்யக் காரணமாக இருந்தது. செய்து முடித்து நித்திரையாக பின்னிரவு
2 மணியைத் தாண்டியிருந்தது. அதனால் காலையில் எழும்ப 7.20 ஆகி
விட்டிருந்தது.

இருப்பினும் உடன் எழுந்து அவசரமாக குளித்து நீலக்காற்சட்டையும்
வெள்ளைச்சேட்டும் அணிந்து முதல்நாள் விளையாடியதால் சப்பாத்தில்
படிந்திருந்த புளுதியையும் துடைத்து போடடுக்கொண்டு வேகவேகமாய்
ஓடிவந்ததை நினைத்தவன் சுபத்திரா ரீச்சரின் அடியால் அவமானப்படுவதை
விட இன்று அவசர அவசரமாக வெளிக்கிட்டு வியர்க்க விறுவிறுக்க
பள்ளிக்கூடம் போவது மேல் என்று மேலும் வேகமாக சைக்கிளை
மிதித்து ஆமிக்காம்ப் சந்திக்கு வந்து சேர்ந்தான்.

சந்தியில் வழமைக்கு மாறாக சனங்கள் வரிசையில் நிற்பதைப்பார்த்த
ரூபன் இன்று பள்ளக்கூடத்திற்கு 8.15 க்கிடையில் போய்ச்சேரலாமா?
என்ற சந்தேகத்துடன் சென்றாலும் தனக்கு தனது பள்ளிக்கூட யுனிபோம்
துணைபுரியும் என்ற் எண்ணத்துடன் ஆமிக்காரனுக்கு கிட்ட போனவன்
ஏமாந்தே போனான். வழமையாக அடையாள அட்டை கேட்காத ஆமிக்
காரன் அன்று கேட்டான்.

" மல்லி ஐ.சி யக் கண்ட..."
" பொட்டக் இண்ட சேர் மங் கனவா..."
" வெலாவ கியா... கண்ட.... இக்மண்ட...."

அடையாள அட்டையை தனது மணிபேசிலும் புத்தகப்பையிலும் மாறிமாறி
தேடியும் கிடைக்கவில்லை. எங்கு போயிருக்கும் என யோசிக்கும் போது
தான் முதல் நாள் பின்னேரம் அடையாள அட்டை இலக்கத்தினை விதா
னையாரிடம் பதிவதற்காக அப்பா வாங்கியதும் பின்னர் அவர் தந்த போது
வாங்கி மேசையி;ல் வைத்ததும் வரும்போது எடுக்க மறந்ததும் நினைவுக்கு
வரவே..

" சேர்..... மம அமத்தவுணா சேர்.... மகே ஐ.சி கெதரட்ட தியன்னே....
கெட்ட எனக்கொட்ட கேண்ட சேர்..... தங் வெலாவ கியா சேர்.....
மம ஸ்கூலட்ட யண்டோண சேர்.....'

"ஏமத.....? தம்ச ஸ்கூலட்ட யண்டோணத....? தம்ச தமாய் கொட்டி....
தம்ச தமாய் உதயட்ட வெடித்தியன்னே..."

என்று உறுக்கியவாறு அடிக்கப் போனான் அந்த ஆமிச்சிப்பாய். அந்த
அடியில் இருந்து லாவகமாக விலகிக் கொண்ட ரூபன்