Friday, April 9, 2010

என் கனவுக்கன்னி


உன்
கருவிழித் தூண்டலிலே
கருக்கட்டியது என் காதல்.
மெருகூட்டி உருவாக்கி
தருவாக்கினேன் நான்.

உன் பார்வை வீச்சினிலே
என் பாவை சிக்கியது.
விண் உயர மூச்சொன்று
வீசி விட்டு அடங்கியது.

என் கனவுக் கன்னியென
உன்னை நான் வரித்துக் கொண்டேன்.
எந்நாளும் உன்னை நான்
கனவினிலே கண்டு வந்தேன்

உன் மீது ஆசைகள்
பன்மடங்கு வளர்த்து வந்தேன்.
கன்னத்திலே முத்தம் உனக்கு
கனவினிலே இட்டு வந்தேன்.

இப்போதும் துள்ளிக் குதிக்குதடி ஆசைகள்
எப்போதும் நான் வந்து உன்னுடன் இருப்பதற்கு.
பற்பல கனவுக்ள... விதம் விதமாக..
சொல்லவும் வேண்டுமோ வாலிபக் கனவுகளை.

காற்றாக வந்து கசமுசா செய்கின்றாய்
போர்வையுள் புகுந்து பூராயம் காட்டுகின்றாய்.
வேர்வையில் என்னை நனைத்தே விடுகின்றாய்
பார்வையில் எல்லாம் பகல்க் கனவாக..

கத்திக் கத்தி தொண்டைத் தண்ணி வற்ற
பித்துப் பிடித்து பேயாய் அலைகின்றேன்.
பத்துப் பத்தாய் வயதுகள் தாண்டி
மொத்தமாய் முப்பது முடிஞ்சு போச்சடி.

காட்டமாய் நானுன்னை கட்டி அணைக்க
வட்டமாய் நீயும் வளைந்து தாடி
திட்டமாய் நீயென்னை அழைத்துப் போக
கூட்டமாய் வாடி என்னைக் கூட்டிப்போக..

அடையாள அட்டை

"அம்மா நான் போட்டு வாறன்" என்று சொல்லி பதிலையும் எதிர்பாராமல்
காலையில் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ நேரமில்லாமல் தனது
சைக்கிளை எடுத்து வேகமாக மிதக்கத்தொடங்கினான் ரூபன். ஓடும் போது
மணியை ஒருமுறை பார்த்தான். மணி 7.53 ஐக் காட்டிக்கொண்டிருந்ததால்
சைக்கிளை மேலும் வேகமாக மிதிக்கத்தொடங்கினான்.

முதல்நாள் பள்ளிக்கூடத்தில் கணிதபாடத்தில் தந்த வீட்டுவேலையைச்
செய்யாததால் சுபத்திரா ரீச்சரிடம் அடி வாங்கியதும் பெண்கள் முன்
அவமானப் பட்டதுமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அதைவிட
அடுத்தநாள் செய்துவராவிட்டால் வகுப்பை விட்டே கலைத்துவிடுவேன்
என்று மிரட்;டியதே அன்று இரவு நீண்டநேரம் விழித்திருந்து வீட்டுவேலை
செய்யக் காரணமாக இருந்தது. செய்து முடித்து நித்திரையாக பின்னிரவு
2 மணியைத் தாண்டியிருந்தது. அதனால் காலையில் எழும்ப 7.20 ஆகி
விட்டிருந்தது.

இருப்பினும் உடன் எழுந்து அவசரமாக குளித்து நீலக்காற்சட்டையும்
வெள்ளைச்சேட்டும் அணிந்து முதல்நாள் விளையாடியதால் சப்பாத்தில்
படிந்திருந்த புளுதியையும் துடைத்து போடடுக்கொண்டு வேகவேகமாய்
ஓடிவந்ததை நினைத்தவன் சுபத்திரா ரீச்சரின் அடியால் அவமானப்படுவதை
விட இன்று அவசர அவசரமாக வெளிக்கிட்டு வியர்க்க விறுவிறுக்க
பள்ளிக்கூடம் போவது மேல் என்று மேலும் வேகமாக சைக்கிளை
மிதித்து ஆமிக்காம்ப் சந்திக்கு வந்து சேர்ந்தான்.

சந்தியில் வழமைக்கு மாறாக சனங்கள் வரிசையில் நிற்பதைப்பார்த்த
ரூபன் இன்று பள்ளக்கூடத்திற்கு 8.15 க்கிடையில் போய்ச்சேரலாமா?
என்ற சந்தேகத்துடன் சென்றாலும் தனக்கு தனது பள்ளிக்கூட யுனிபோம்
துணைபுரியும் என்ற் எண்ணத்துடன் ஆமிக்காரனுக்கு கிட்ட போனவன்
ஏமாந்தே போனான். வழமையாக அடையாள அட்டை கேட்காத ஆமிக்
காரன் அன்று கேட்டான்.

" மல்லி ஐ.சி யக் கண்ட..."
" பொட்டக் இண்ட சேர் மங் கனவா..."
" வெலாவ கியா... கண்ட.... இக்மண்ட...."

அடையாள அட்டையை தனது மணிபேசிலும் புத்தகப்பையிலும் மாறிமாறி
தேடியும் கிடைக்கவில்லை. எங்கு போயிருக்கும் என யோசிக்கும் போது
தான் முதல் நாள் பின்னேரம் அடையாள அட்டை இலக்கத்தினை விதா
னையாரிடம் பதிவதற்காக அப்பா வாங்கியதும் பின்னர் அவர் தந்த போது
வாங்கி மேசையி;ல் வைத்ததும் வரும்போது எடுக்க மறந்ததும் நினைவுக்கு
வரவே..

" சேர்..... மம அமத்தவுணா சேர்.... மகே ஐ.சி கெதரட்ட தியன்னே....
கெட்ட எனக்கொட்ட கேண்ட சேர்..... தங் வெலாவ கியா சேர்.....
மம ஸ்கூலட்ட யண்டோண சேர்.....'

"ஏமத.....? தம்ச ஸ்கூலட்ட யண்டோணத....? தம்ச தமாய் கொட்டி....
தம்ச தமாய் உதயட்ட வெடித்தியன்னே..."

என்று உறுக்கியவாறு அடிக்கப் போனான் அந்த ஆமிச்சிப்பாய். அந்த
அடியில் இருந்து லாவகமாக விலகிக் கொண்ட ரூபன்

Monday, July 6, 2009

என் வாழ்வின் ஆணிவேர்.


கடவுள் எனக்குத் தந்த கொடை
தடவியும் கிடைக்காத சொந்தப்படை- என்
கடவுச்சொல் வாழ்வில் வந்த விடை..!

நீ என் வாழ்வில் கிடைத்த வரம்
வாழ்வின் இசையில் அடிநாத சுரம்
எம் வாழ்வில் முதலான வலது கரம்..!

மனதினால் என்றென்றும் என்னைப்பார் -நீ என்
வாழ்வின் விருட்சத்தின் ஆணிவேர்
உலகினில் நிலைத்திடும் உந்தன் பேர்..!

எந்தன் வாழ்வில் நீ என் பெஸ்ட் பிறண்ட்
என்னுயிர் வெளிச்சத்திற்கு நீ தான் மஸ்ட் கரண்ட்
நான் என்றும் உன்னிடம் வந்து சரண்ட்..!

நான் நிலத்தில் நட்டு வைத்த பயிர்
நீ தான் இந்தப் பயிரின் உயிர்
நீ இல்லையேல் நான் வெறும் மயிர்.

நீதான் என் வாழ்வின் சோடி
ஓடி வந்து ஒரு முத்தம் தாடி
அதற்காக நான் தருவேன் பலகோடி.

ஏன் அப்படி அழுதாய்?

அன்புள்ளம் கொண்டவளுக்கு,
வணக்கம்.
நீ இங்கு நலம்
நீ விட்டுச்சென்ற கண்ணீர் தொடர்கிறது இன்றுவரை என்னுடன்….

ஏன் அப்படி அழுதாய்?
தாங்க முடியவில்லை எனக்கு…
இப்பவும் நீ அழுததை நினைத்தால் கண்கள் குளமாகி
உடைப்பெடுக்க தளம்புகின்றது.

அனுப்பும் போது அழவேண்டாம் என்று ஐயா
சொன்னதால் விடை பெறும் வேளையில் வேறு விடயங்கள் பேசி
என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஆனாலும் தொண்டை கனத்து மூக்கு சிந்தி குளமாகியது கண்கள்.

பாசமாகப் பழகி முப்பத்தாறு மாதங்கள் கடந்து விட்ட போதும்
நாமாக கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்ட எனக்கு
கட்டுப்படுத்த முடியவில்லை கண்ணீரை......

விரைவில் இருவரும் ஒருவராக வாழ்வோம்.

உனது அன்பும்,
இறை அருளும் இருந்தால்,
என்னை எதனாலும் அசைத்திட முடியாது.

வெற்றி வீரனாய்
வாழ்வின் உச்சியில்
நின்று வெற்றிக்கொடி நாட்டுவேன்.
இது சத்தியம்.

என்றென்றும் அன்புடன்
உன்னவன்.

Wednesday, October 1, 2008

இனிய ரமழான் வாழ்த்துக்கள்.

இன்று ரமழான் நோன்பு பெருநாளைக் கொண்டாடும்
அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கம் எமது
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.