வசந்த காலங்கள் இழந்து - இரு
தசாப்த காலங்களாக
பறக்கத் துடிக்கும் - தமிழ்
இதயத் துடிப்புக்கள் ஏராளம்....!
வதைக்கும் சிங்கள அரசு,
சிதைக்கும் தமிழர் ஓர்மத்தை.
சதைக்கு அலையும் துரோகிகள்,
விதைக்கும் நஞ்சை, இள நெஞ்சுகளில்...1
வேரோடு பிடுங்கியெறி, உன் கௌரவத்தை,
ஊரோடு பதுங்கியெழு, பட்டாளமாக,
காரோடு வந்த கயவன், காற்றோடு போவான்.
பாரோடு பேசு, உன் விடுதலையின் வீரத்தை.....!
நார் நாராக, தும்பு பறந்தது போதும்.
சேர் ஒன்றாக, தும்பெல்லாம் சேர்ந்து கயிறாக,
பார்.. விடுதலைக்காக, சுதந்திர இலக்கை,
பேர் சொல்லும் தமிழன் வீரத்தின் வெற்றியை...!
மறப்போம், எம்முள் பழையவற்றை,
பறப்போம், உலகினில் சுதந்திரமாக,
வெறுப்போம், பொறாமையால் புழுங்குவதை,
அறுப்போம், எதிரியின் கருந் திட்டங்களை..!
அன்னதானம் செய்வோம், ஏழை பசி அடங்க..
கண்தானம் செய்வோம், குருடன் பார்வை கிடைக்க..
ரத்ததானம் செய்வோம், தவிக்கும் உயிர் காக்க..
சமாதனம் செய்வோம், தமிழன் சுதந்திரம் அனுபவிக்க...!
புலரட்டும் புதிய பொழுது,
வளரட்டும் மக்களிடை ஒற்றுமை,
ஒளிரட்டும் சுதந்திர ஒளிக் கீற்று,
மலரட்டும் உலகினில் சமாதானம்...!!!
Tuesday, July 15, 2008
Sunday, July 13, 2008
சாந்திக்காக மண்டியிடு....!!!
Thursday, July 10, 2008
கனவாகவே போய்விட்ட கனவு.....!!!

முரளி ஒரு படித்த குடும்பத்தை சேர்ந்தவன்.
வீட்டில் ஐந்து சகோதரர்களுள் இவன் நடுப்பிள்ளை.
மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள். இவனுக்கு,
அக்கா, அண்ணா, தம்பி, தங்கை என எல்லா உறவு
முறைகளும் இருந்தன.
சிதம்பரப்பிள்ளை, முரளியின் அப்பா. சிறிய பாடசாலை
ஒன்றில் அதிபராக இருக்கிறார். அம்மா வீட்டுப்பணி,
அதனால் அம்மாவின் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் வளர்ந்தனர்.
சிதம்பரத்தாரின் மாதச்சம்பளமான பதினையாயிரம்
ரூபாவினை நம்பியே, அந்த குடும்பத்தின் ஏழு ஜீவன்களும்,
உணவு, உடை, படிப்புச் செலவு என அனைத்துத்
தேவைகளையும் நிறைவு செய்து வந்தார்கள்.
வீட்டில் மூத்தவன் எனும் வகையில் தர்சனும்,
மூத்தவள் எனும் வகையில் தர்சினியும்,
கடைக்குட்டி எனும் வகையில் சுதனும்,
இளையள் எனும் வகையில் சுதாவும்,
செல்லப்பிள்ளைகளாக இருந்தனர்.
முரளி மட்டும் நடுவில் பிறந்ததால், எடுபிடிப்
பிள்ளையாகப் போய் விட்டான்.
Wednesday, July 9, 2008
தேற்றிக்கொள் மனதை....!!!
மெய் மறைத்து, உன்மீது
பொய்ப் புகார்கள் செய்வார்கள்.
வாய் தவறியேனும் அவர்கள் மீது- நீ
நாய் போல் பாய்ந்து குதறி விடாதே...!
இல்லாத பொல்லாதவை எல்லாம் - எந்த
தள்ளாத வயதிலும், தளராது,
பல்லெல்லாம் இளித்துக் காட்டி,
சொல்லால் அடிப்பர், உனைப்பற்றி...!
இவையெல்லா, வற்றையும் பார்த்து,
அவையில் தளர்வாக இருந்து விடாதே.
கயவர் வீசும், ஒவ்வொரு சொல்லும் - உனை
உயர்த்தும் அத்திவாரக் கற்கள், நினைவிற்கொள்...!
காய்க்கிற மரத்துக்கு தான், கல்லெறி விழும் - அவரிடமிருந்து
பாய்கிற சொற்கள் உன் திறமைகளின் எண்ணிக்கைக்கு சமம்.
சாய்க்கிற நோக்கம் தான் உன் திறமைகளை..,
வேய்ந்த வீட்டுக்குள், நெல்மணி போல் பத்திரமாக காத்திடு...!
தற்காலிக பின்னடைவு தான் இது என்பதை
பிற்காலத்தில் புரிந்து கொள்வாய்.
முற்காலத்தில் நடந்தை யோசித்துப் பார்,
எக்காலத்திலும் வெற்றி உனக்குத் தான்....!
தேற்றிக் கொள் மனதை, பின்னடைவுகளில் இருந்து,
போற்றிக்கொள் தமிழ்த்தெய்வம், முருகனை என்றும்,
தொற்றிக்கொள் உன் மன வலிமையை மேலும் - பறை
சாற்றிக்கொள் வெற்றிகள் என்றென்றும் உனதென்று....!!!
Sunday, July 6, 2008
சேர்ந்திரு என்னுடன்...!!!
சங்கடங்கள், ஏனடி பெண்ணே..?
அந்தரங்கம், ஏதுமில்லை நமக்குள்,
அந்தரமின்றி, ஆறுதலாக வாடி - நீ
தந்த முத்தங்கள், இனிக்கிறது இப்போதும்...!
தாலி கட்டி உனை சொந்தமாக்கிட்டேன்,
வேலி போட்டு வைக்காதே - ஆசைகளுக்கு,
போலி ஆக்கிடாதே - என் இதயக் கனவுகளை,
கோலிக் கொடு, இரு பிள்ளைக் கனிகளை...!
சாவி வைத்து, அடக்கிப் பூட்டி,
பாவியாய், என்னை தவிக்க வைக்கிறாய்.
வாலி போல எனக்கு, தெரியாது கவியெழுத,
காலி தான் ஆக்கலாம், பல பியர் டின்களை..!
காதல் மகா ராணியாக்கி - என்
சாதல் வரை காத்திருப்பேன்.
மோதல் ஏதுமின்றி சேர்ந்திரு - என்
வாழல் காலம் வரையும்....!
கொடுத்திட்டேன், என்னுயிரை உன்னிடம்,
தடுத்திட்டேன், என் ஆணவம் திமிரெல்லாம்.
வெறுத்திட்டேன், எனக்கென்றிருந்த ஆசைகளை,
எடுத்திட்டேன் முடிவு, உனக்காக வாழ்வதென்று...!
தட்சணையாக, கொடுக்கிறேன் என்னை,
வஞ்சனையின்றி, கொடுத்திடு உன்னை,
பஞ்சணை மீது, கட்டி, எனை அணைத்து,
முத்தங்கள் கொடு, நான் முழுமையாக வாழ....!!!
Saturday, July 5, 2008
அலை ஆடை ஏனோ...??
உள்ளங்கை வரை, சுருங்கிய உலகினில்,
தொடை வரை சுருங்கிய, ஆடை அணிந்து,
படை எடுக்கும் பெண்களை - நீ
தடை விதிக்கச் சொல்லவா - இந்த,
அலை ஆடை அணிந்துள்ளாய்...?
அரை குறை, ஆடை அணிந்து,
அரை வரை, தெரியும் வகையில்,
தரையிலே, நடந்து வந்து,
சிதைக்கிறீர், எம் இளையவர் நெஞ்சை,
விதைக்கிறீர், அவர் நெஞ்சில் நஞ்சை..!
நாகரீக வளர்ச்சியில், இது அற்ப ஆசையாய்,
மேகமாய் சூழ்ந்துள்ள, ஒரு கொடிய நோய்,
வேகம் கொண்டு, பெற்றோர் திருத்தாவிட்டால்,
மோசமாகிவிடும், நாட்டில் குற்றங்களெல்லாம்,
நாசமாகிவிடும், இளையவரின் வருங்காலமெலாம்..!
ஒருவன், ஒன்றைச் செய்தால் - அதை
நீயும், செய்து காட்டு.
அதை விடுத்து, தடுக்க முயலாதே...
இது தான், கருத்துச் சுதந்திரமாம்...!
பிழையாக விளங்கிய சிலர் - இதை
சுளையாக பயன்படுத்தி, கெடுக்கின்றார்..
வளையாத, நற்குணம் கொண்டோரும்,
சளையாது இறங்குகின்றார், களத்தில்...!
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது ..."
என்பது போல்
பெண்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால்,
நாட்டில் குற்றங்களை தடுக்க முடியாது...!!!
