
கருவறையின் உள்ளே
குருவாக பிரகாசிக்கும்
வருங்கால உலகத்தின்
திருமுடி ராசாவே..........!
சுருண்டு, படுத்து
மருண்டு விழித்து
பாவை போல நீ
படுத்து உறங்குகின்றாய்...!
ஆண்மகனின் வீரியத்தில்
பெண்மகள் கர்ப்பமுற்று
உனைச்சுமந்து பத்துமாதம்
தனைக்கொடுத்து உனை படைத்தாள்....!
தன்னையே பணயம் வைத்து
பத்து மாதம் தவமிருந்து
சத்தாக உண்டு, ஊட்டி வளர்த்து,
பூப்போன்ற கரு உன்னை
பூமியிலே ஈன்றெடுத்தாள்
உருவாக........!
கருவிலே இருக்கும் நீ
வெளியிலே வருமுன்பே - உன்
கருவிலே காதல் ஜோடியை
உருவாக்கி வைத்துள்ளாய்....!
காதலின் உருவாக்கம்,
கருவறையினுடைய கருவிலே,
கருவினுடைய கருவறையிலே
உருவாகி விடுகின்றது.....!
காதலுக்கு மரியாதை கொடுத்து
சாதலுக்கு விடை கொடுங்கள்.
பாதம் தொட்டு தாயவளின்
பாசத்தை பெற்றிடுங்கள்.....!
Monday, May 12, 2008
Thursday, May 1, 2008
முத்தமொன்று நான் கொடுத்தேன்,
சித்திரையின் பத்திலேமுத்தமொன்று நான் கொடுத்தேன்,
சத்தமின்றி பெற்றுக்கொண்டாள்
முத்துமணி என் தேவதை.
அவள் தோளில் கை போட்டு
தலை வருடி, இறுக அணைத்து
இதழோடு இதழ் பதித்து
முத்தமொன்று நான் கொடுத்தேன்,
கொவ்வை பழம் போல் சிவக்கும் வரை......!
இதழ்களில் இருந்து கீழிறங்கி
முத்துக்கள் இரண்டிலும்
இச் என்ற சத்தத்துடன்
முத்தமொன்று நான் கொடுத்தேன்
முல்லையவள் வெட்கத்தில் சிரிக்கும் வரை......!
கட்டி அணைத்து, கட்டிலில்
முட்டி ப்போட்டு, முகம் புதைத்து
வெட்டிப்பயல் இவன் வெட்கமின்றி
முத்தமொன்று நான் கொடுத்தேன்
மூச்சிருக்கும் வரை நினைத்திருக்க.....!
வாழ்வெல்லாம் இனித்திருக்க
வாழ்வின் சுவை நாமறிய
காதல் வேர் ஆழ்ந்து ஓட,
முத்தமொன்று நான் கொடுத்தேன்
ரத்தமெல்லாம் கொதிக்கும் வரை......!
நெஞ்சமெல்லாம் துடி துடிக்க
அங்கமெல்லாம் அனலடிக்க
தூக்கமின்றி தவிக்கின்றேன் நான்
தமிழ் மகன் எனை தூக்கி
தாலாட்ட வாடி குட்டி
உன் முத்தமின்றி என்னால், முடியவில்லை
உலகத்தில் நிலைத்து வாழ்ந்திட......!
பட்டியல் ;
கவிதைகள்
Tuesday, April 22, 2008
அவன் கேட்ட சீதனம்
செவ்வாழை நிறத்தவள்
அம்மாளை போன்்றவள்
எந்நாளும் அவள்் முகத்தை
பார்த்தாலும் அவா அடங்கா....!
கரு நிறக் கூந்தலுக்கு
கருவேப்பிலை தைலம் தடவி
நடு உச்சி பிரித்து
ஒற்றைச்சடை பின்னலிட்டு
கன்னக்குழி விழ சிரித்து
என்னை விழ வைத்தவள்.....!
அவள் செல்லக் கதை கேட்டு
இவன் சிறையில் விழுந்தவன்
எழுந்தும் மீள விழுந்தேன்
விழுந்தது சொர்க்கம் என்பதால்...!
கிடைத்த சொர்க்கம் தொடர்ந்திருக்க - அவளை
படைத்த பெற்றோர் சூழ்ந்திருக்க
ஆழ்ந்து பேசி, என் விருப்பம் சொல்லி - அவளுடன்
வாழ்ந்து விட ஆசைப்பட்டேன், என் வாழ்நாள் முழுதும்....!
சீதனம் என்னவென படைத்தவர் கேட்க,
மூலதனம் அவள் தான் அதை கொடுங்கள் போதும்.
சீதனம் என்று இவன் கோபத்தை கிளற வேண்டாம்,
வேதனை தான் மிஞ்சும் என எகிறி நின்றான்...!
அவளிடம் கேட்கிறேன் சீதனம்.....
அதை அவள் கொடுத்தால் போதும் எனக்கு...!
என்றும் என்னருகில் அன்போடு இரு.
என் துன்பம் நீங்க, நீ சிரிப்போடு இரு.
என் கோபம் அடங்க உன் கோபம் அகற்று.
நான் சந்தோசமாக இருக்க நீ சந்தோசாமாக இரு.
ந ீசந்தோசமாக இருந்தால்
நாம் எல்லோரும் சந்தோசமாக இருப்போம்.......!
சீதனம், சீர்வரிசை சிறியோர் பேச்சு,
வேதனை பார் வரிசையில் பெருகிப ்போச்சு
பெண்கள் ஓர் வரியில் பலமாக நின்றால்
ஆண்கள் பின் வரியில் காத்திருப்பர் பெண்களுக்காய்...!
சீதனம் கூடவாங்கி திருமணம் செய்தவன்,
பிழை பிடிக்கிறான் பெண்டிலில் ஈசியாக
வாழ நினைக்கிறான் வாழ்க்கையில் ஓசியாக
தாழ வைக்கின்றார் அவனை, பெண் பெற்றோர்....!
ஊரிலே பல கதைகள் பரவுகின்றன..
அவளில் பல குறைகள் இருக்காம்,
அதனால் சீதனம் பலமாக இருக்காம்.
அவள் குறை தெரிந்து கட்டிகிட்டானாம்.
அதனால் கேட்டானாம் கூடுதல் சீதனம்....!
வீண்வம்பை விலைக்கு வாங்கும் பெற்றோரே
ஊர் வம்பை கேட்டிடுவீர் படைத்தோரே
யார் வம்பும் வராது உங்களுக்கு
நிறூத்திடுவீர் சீதனத்தை - உங்கள்
பிள்ளை நலம் வாழ........!!!
அம்மாளை போன்்றவள்
எந்நாளும் அவள்் முகத்தை
பார்த்தாலும் அவா அடங்கா....!
கரு நிறக் கூந்தலுக்கு
கருவேப்பிலை தைலம் தடவி
நடு உச்சி பிரித்து
ஒற்றைச்சடை பின்னலிட்டு
கன்னக்குழி விழ சிரித்து
என்னை விழ வைத்தவள்.....!
அவள் செல்லக் கதை கேட்டு
இவன் சிறையில் விழுந்தவன்
எழுந்தும் மீள விழுந்தேன்
விழுந்தது சொர்க்கம் என்பதால்...!
கிடைத்த சொர்க்கம் தொடர்ந்திருக்க - அவளை
படைத்த பெற்றோர் சூழ்ந்திருக்க
ஆழ்ந்து பேசி, என் விருப்பம் சொல்லி - அவளுடன்
வாழ்ந்து விட ஆசைப்பட்டேன், என் வாழ்நாள் முழுதும்....!
சீதனம் என்னவென படைத்தவர் கேட்க,
மூலதனம் அவள் தான் அதை கொடுங்கள் போதும்.
சீதனம் என்று இவன் கோபத்தை கிளற வேண்டாம்,
வேதனை தான் மிஞ்சும் என எகிறி நின்றான்...!
அவளிடம் கேட்கிறேன் சீதனம்.....
அதை அவள் கொடுத்தால் போதும் எனக்கு...!
என்றும் என்னருகில் அன்போடு இரு.
என் துன்பம் நீங்க, நீ சிரிப்போடு இரு.
என் கோபம் அடங்க உன் கோபம் அகற்று.
நான் சந்தோசமாக இருக்க நீ சந்தோசாமாக இரு.
ந ீசந்தோசமாக இருந்தால்
நாம் எல்லோரும் சந்தோசமாக இருப்போம்.......!
சீதனம், சீர்வரிசை சிறியோர் பேச்சு,
வேதனை பார் வரிசையில் பெருகிப ்போச்சு
பெண்கள் ஓர் வரியில் பலமாக நின்றால்
ஆண்கள் பின் வரியில் காத்திருப்பர் பெண்களுக்காய்...!
சீதனம் கூடவாங்கி திருமணம் செய்தவன்,
பிழை பிடிக்கிறான் பெண்டிலில் ஈசியாக
வாழ நினைக்கிறான் வாழ்க்கையில் ஓசியாக
தாழ வைக்கின்றார் அவனை, பெண் பெற்றோர்....!
ஊரிலே பல கதைகள் பரவுகின்றன..
அவளில் பல குறைகள் இருக்காம்,
அதனால் சீதனம் பலமாக இருக்காம்.
அவள் குறை தெரிந்து கட்டிகிட்டானாம்.
அதனால் கேட்டானாம் கூடுதல் சீதனம்....!
வீண்வம்பை விலைக்கு வாங்கும் பெற்றோரே
ஊர் வம்பை கேட்டிடுவீர் படைத்தோரே
யார் வம்பும் வராது உங்களுக்கு
நிறூத்திடுவீர் சீதனத்தை - உங்கள்
பிள்ளை நலம் வாழ........!!!
பட்டியல் ;
கவிதைகள்
Saturday, April 19, 2008
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் வீட்டிலேயே இருந்து கும்மாளமடித்துக்கொண்டிருந்தார்கள். சிவத்தாரின் இரு தோள்களிலும்
சிவசங்கரும், ஜெய்சங்கரும் இருந்து கொண்டு அவரின் காதையும்,
வாயையும் பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
தர்சினி, கீதா, தீபா, தாரணி, மதுரா, ஐவரும் சாரி உடுத்தி, தலையில் மல்லிக்கைப்பூ சூடி, குங்கும பொட்டு வைத்து, ஒன்றாக இருந்து போஸ் குடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அம்மா..! இஞ்சை ஒருக்கா வந்து பாருங்கோவன்.... என்று மதுரா கூப்பிடவும், அடுப்படியில் சமையலில் இருந்த மரகதம், அடுப்பில் நெருப்பை
குறைத்து விட்டு வந்து, திண்ணையை எட்டிப்பார்த்து, திகைத்துப்போனாள்.
என்னடி இது விளையாட்டு...? உங்களுக்கு வேளையோட கலியாணத்தை கட்டி குடுத்தும் உங்களின்ர அட்டகாசம் குறையேல்ல... என்று சொல்லியபடி அடுப்படிக்கு திரும்பிய மரகதம், இப்படியே எல்லோரும் பாசமாக, ஒற்றுமையாக இருக்க வேணும் என தங்கள் குல தெய்வமான சன்னதி முருகனை மனதினுள் பிரார்த்தித்துக்கொண்டு வேலைகளை கவனிக்கலானாள்.
சிவத்தாரும், மரகதமும் திருமணம் செய்து ஐந்து பெண் பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். விதானை வேலை பார்த்தாலும், மேலதிக வருமானத்திற்காக சிவத்தார் வீட்டில் சின்ன
தோட்டம் ஒன்றும் வைத்திருந்தார். மரகதமும் பிள்ளைகளும் சிவத்தாருக்கு உறுதுணையாகவே இருந்து வந்தார்கள்.
ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றவருக்கு ஏக்கங்கள் இருக்க தானே செய்யும். படிப்பு, உடுப்பு, சாப்பாடு, என செலவுகள் அதிகமாச்சே.. அதைவிட யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை, சீதனம் என்றும் ஒன்று உள்ளதே..!
ஐந்தும் பெண் பிள்ளைகளாக போச்சு, ஒரு ஆண் பிள்ளை இல்லையே என்று மனதளவில் சிறு கவலை இருந்தாலும் ஐந்து பிள்ளைகளின் படிப்புத்திறமை, அழகு, சுட்டித்தனமான விளையாட்டு, ஒவ்வொருத்தர் மீதும் வைத்திருந்த பாசம் என்பன அந்த கவலையை அடியோடு மறக்கடிக்கச் செய்திருந்தது.
பட்டியல் ;
சிறுகதைகள்
Friday, April 18, 2008
கோலாலம்பூர்
மஹா மாரியம்மன் கோவிலில்
சித்திரைப் பொங்கல்(புத்தாண்டு)
கொண்டாட வந்த சீனப்பெண்மணி ms.wong
தமிழ் கலாச்சாரத்தில்...,
பொட்டு, சுடிதார் அணிந்து...,
அர்ச்சனைத்தட்டுடன்....!
மஹா மாரியம்மன் கோவிலில்
சித்திரைப் பொங்கல்(புத்தாண்டு)
கொண்டாட வந்த சீனப்பெண்மணி ms.wong
தமிழ் கலாச்சாரத்தில்...,
பொட்டு, சுடிதார் அணிந்து...,
அர்ச்சனைத்தட்டுடன்....!
பட்டியல் ;
அதிசயம்
Tuesday, April 15, 2008
பச்சையாக சொல்கிறேன் நான்...,அவளை ரொம்ப பிடிச்சுப்போச்சுது எனக்கு.....!
கோலாலம்பூர் கோட்டுமலையான் கோயிலிலே..,
தீபத்திருநாள் கொண்டாட்ட கூடலிலே..,
முண்டியடித்து பக்தர்கள் குதூகலிக்கையிலே.....,
குண்டுமணி போல வந்து நிண்டு கொண்டிருந்தாள்,
ஓர் இளமங்கை...!
மல்லிகை பூச்சூடி ......
மறூண் கலர் தாவணி அணிந்து...,
பந்தா ஏதுமின்றி, தந்தையாருடன்...
வந்தாள் கோவிலுக்கு அர்ச்சனைத்தட்டோடு...!
அவளை கண்டதும், உதித்து மலர்ந்தது,
என் மனதினுள், புது சூரியன் ஒன்று..
மெய் மறந்து போனேன் நான் - இது
மெய் தானா எனக்கேட்டு...!
அனைத்து கண்களும், அவள் மீது பட,
அத்தனை கண்களையும், ஏமாற்றி விட்டு...,
எனையளைத்து.... வாழ்த்து சொன்னதும்..,
ஏங்கிப்போனேன் நான்......
துடித்தது இதயம் படபடவென...
வெடுக்கென சொன்னேன் என் தீபாவளி வாழ்த்து...!
அவள் பார்வையிலும் பேச்சிலும்
மயங்கி கிறங்கிப்போனேன் நான்....!
சாப்பிட நானழைத்து, உட்கார்ந்து கொண்டதும்...,
இட்லி, தோசை என ஓடர் குடுத்தாள்...
விரும்பிச்சாப்பிட்டேன் வேண்டாத தோசையையும்,
கரும்பிலும் இனித்தது, புளித்த தோசையும்....!
சாப்பிட்டு முடித்து காசு கொடுக்கவும்.....,
கை பிடித்து, தடுத்து, அவள் நீட்டவும்....,
நான் ஒரு பார்வை பார்க்க.. அவள் அமர்ந்து கொண்டதும்...,
மறக்க முடியவில்லை எனக்கு...!
அனுமதி கேட்டு, அவள் படம் பிடித்து,
அடிக்கடி அவளை, பார்த்து நினைத்ததும்....,
தந்திரமாக, தொந்தரவின்றி சம்மதம் கேட்க....,
சந்தோசத்தில் மிதக்க வைத்தாள்......
தன் சம்மதம் சொல்லி...!
வெட்கத்தை விட்டு...,
பச்சையாக சொல்கிறேன்.. நான்...,
சத்தியமாக அவளை ரொம்ப....,
பிடிச்சுப்போச்சுது எனக்கு.....!
தீபத்திருநாள் கொண்டாட்ட கூடலிலே..,
முண்டியடித்து பக்தர்கள் குதூகலிக்கையிலே.....,
குண்டுமணி போல வந்து நிண்டு கொண்டிருந்தாள்,
ஓர் இளமங்கை...!
மல்லிகை பூச்சூடி ......
மறூண் கலர் தாவணி அணிந்து...,
பந்தா ஏதுமின்றி, தந்தையாருடன்...
வந்தாள் கோவிலுக்கு அர்ச்சனைத்தட்டோடு...!
அவளை கண்டதும், உதித்து மலர்ந்தது,
என் மனதினுள், புது சூரியன் ஒன்று..
மெய் மறந்து போனேன் நான் - இது
மெய் தானா எனக்கேட்டு...!
அனைத்து கண்களும், அவள் மீது பட,
அத்தனை கண்களையும், ஏமாற்றி விட்டு...,
எனையளைத்து.... வாழ்த்து சொன்னதும்..,
ஏங்கிப்போனேன் நான்......
துடித்தது இதயம் படபடவென...
வெடுக்கென சொன்னேன் என் தீபாவளி வாழ்த்து...!
அவள் பார்வையிலும் பேச்சிலும்
மயங்கி கிறங்கிப்போனேன் நான்....!
சாப்பிட நானழைத்து, உட்கார்ந்து கொண்டதும்...,
இட்லி, தோசை என ஓடர் குடுத்தாள்...
விரும்பிச்சாப்பிட்டேன் வேண்டாத தோசையையும்,
கரும்பிலும் இனித்தது, புளித்த தோசையும்....!
சாப்பிட்டு முடித்து காசு கொடுக்கவும்.....,
கை பிடித்து, தடுத்து, அவள் நீட்டவும்....,
நான் ஒரு பார்வை பார்க்க.. அவள் அமர்ந்து கொண்டதும்...,
மறக்க முடியவில்லை எனக்கு...!
அனுமதி கேட்டு, அவள் படம் பிடித்து,
அடிக்கடி அவளை, பார்த்து நினைத்ததும்....,
தந்திரமாக, தொந்தரவின்றி சம்மதம் கேட்க....,
சந்தோசத்தில் மிதக்க வைத்தாள்......
தன் சம்மதம் சொல்லி...!
வெட்கத்தை விட்டு...,
பச்சையாக சொல்கிறேன்.. நான்...,
சத்தியமாக அவளை ரொம்ப....,
பிடிச்சுப்போச்சுது எனக்கு.....!
பட்டியல் ;
கவிதைகள்
Subscribe to:
Comments (Atom)

