Saturday, April 12, 2008

நாகரீக மோகம்......


11 மணியாகியும் மாக்கற்றுக்கு போன மனிசன
இவ்வளவு நேரமாக காணோம்.....
என அலுத்துக்கொண்ட பரிமளம் வாசலை எட்டிப்பார்த்தாள்.
பாதையில் மாலினி ரீச்சர் நடந்து போவதை கண்டவள்...,

"ரீச்சர்.... ரீச்சர்... இஞ்சை ஒருக்கா பாருங்கோ.....
நான் இஞ்சினியர் தர்சினியின்ர அம்மா... ரீச்சர்...."
தன்னை யாரோ கூப்பிடுவது போல இருக்கவே
திரும்பிப்பார்த்த ரீச்சர்..,
பரிமளத்தை கண்டு - கிட்ட வந்து -
"ஓ... நீங்களா? எப்படி இருக்குறீங்க....தர்சினி எப்படி இருக்குறாள்...?
" நாங்கள் நல்லா தான் இருக்கிறம். தர்சினிக்கும் என்ன குறை......
வாங்க ரீச்சர் - ரீ குடிச்சிட்டு போகலாம்..."
என்ற பரிமளம் வீட்டுக்குள் கூட்டிச்சென்று உட்கார வைத்தாள்.

"ரீச்சர்.. கூலா...? ஹொட்டா.... குடிக்குறீங்க..."
"வெய்யில் கண்ண எரிக்குது..
கூலா இருந்தா குடுங்க.. நல்லா இருக்கும்..."

ரீச்சருக்கு வண் மினிற் சொன்ன பரிமளம்
வேலைக்காரிக்கு ஓடர் போட்டாள்...
"கலா.... தர்சினியின்ர ரீச்சர் வந்திருக்கிறா...
நல்ல கூலா fresh apple juice எடுத்திட்டு வா..
அத்தோட ப்றிஜ்ஜில கேக்கும் இருக்கு - எடுத்திட்டு வா..."

"சொறி ரீச்சர்.. தர்சினியின்ர அல்பம் பார்க்குறீங்களோ..?"
"ஓமோம் குடுங்க.. அவளையும் பார்த்து கன காலம் ஆச்சுது..."

பரிமளத்திடம் அல்பத்தை வாங்கி பார்த்த ரீச்சர்...
"ஓ முதல் மாதிரி நல்ல ஸ்லிம்மாகவே இருக்கிறாள்...
இது ஆர் பெடியன்..."
என்று தர்சினியுடன் நெருக்கமாக இருந்தவனை காட்டி கேட்டா

"ஓ இதுவா...
இவர் தர்சினியோட வேலை செய்யிறவராம்...
தமிழன் தான்..
ஆனால் தமிழ் பேச வராது...
தமிங்கிலிஷ் தான்....
எங்கயாவது ஒரு சொல்லு போட்டு
காலங்களை மாத்தி மாத்தி
ஏதோ ஒரு மாதிரி தான் சொல்லுவார்.

Monday, April 7, 2008

எல்லாமே ஏக்கங்களாய்.....!











எந்த வயதினிலும்,
பாசத்தோடு சோறூட்டி விட,
எப்போதும் என்னருகில் வேண்டும்...,
என் அருமை தாய்.......!

சோகத்தில் நான்..,
துவண்டிருக்கும் போதெல்லாம்....,
அன்போடு... தலை வருடி.... அணைத்து,
ஆறுதல் சொல்ல....,
என் மனைவி....!

என் நெஞ்சினிலே ஏறி....,
தன் பஞ்சுக்கால்களால் உதைத்து....,
மஞ்சமென நினைத்து...,
மெய் மறந்து தூங்க...,
என் மகன்....!

அப்பா.... அப்பா... என்று,
வாய் நிறைய கூப்பிட்டு .,
பாசத்தைப் பொழிந்து...,
குடும்பக் குலவிளக்காக...,
என் மகள்...!

அக்கா.... அண்ணா......,
தம்பி..... தங்கா....,
மச்சான்.... மாமா.....,
பாட்டன்..... பாட்டி... என்று,
பாசமுடன் நானழைத்து....,
அன்போடு ஆதரிக்க...,
என்னருகில்... என்றென்றும்..,
என் உறவுகள்...!

கூடிக்குலாவி கும்மாளமடித்து....,
கிட்டிப்புள்ளு விளையாடி...,
நெஞ்சத்தில் வஞ்சமின்றி...,
பஞ்சியில் படுத்துறங்க...,
என் வீடு...!

நாடு நாடாக, நாயாக அலைந்து....,
தேடும் சொத்து, சீர்வரிசைகளை....,
சீரழியாமல்... ஆண்டு அனுபவிக்க...,
அமைதியாக.. அழகாக...,
என் நாடு......!

எல்லாமே ....,
ஏக்கங்களாய்.....!
என்னை வெல்ல யாருமில்லை......,
என்னருகில் அனைத்தும் இருந்தால்.......!!!

Sunday, April 6, 2008

அவர்கள் காதல் திருமணம் செய்தவர்களாம்…!




















அம்மாடி…….!
சாப்பிட்டீங்களா….?
எப்படி இருக்கிறீங்கள்……?
உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்க…….!
தொலைபேசியில்..,
கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தார்..,
அப்பா..,
அம்மாவிடம்……!
அவர்கள்
காதல் திருமணம் செய்தவர்களாம்…!

உனக்கு....,
நல்ல மாப்பிள்ளை ..,
பார்த்துப் பேசி கட்டலாம்…..,
காதல் எல்லாம் கூடாது……!
நண்பனுடன் தொலை பேசியில் பேசிய மகளுக்கு….,
அறிவுரை சொன்னார் அப்பா….!!!

THOUGHTS



I do not care for liberation, I would rather go to a hundred thousand hells, doing good to others (silently) like the spring this is my religion.

Swami Vivekananda


Determine that things can and shall be done, and then we shall find the way.

Abraham Lincoln-


Whatever you can do or dream you can, begin it. Boldness has genius, power and magic in it. Begin it now.

-Goethe-

Saturday, April 5, 2008

வெறுத்துப்போனாலும் பொறுத்தே போகிறேன்…!



பஞ்சணையில்
நெஞ்சணைத்து
படுத்துறங்கியது பல நேரம்…….!
வேட்கையிலே உதடிணைத்து
கொஞ்சி மகிழ்ந்தது பல நேரம்……!!

விழியோடு விழி பார்தது
விசும்பு பேசியது பல நேரம்……!
மூச்சு முட்ட கட்டிப்பிடித்து
உருண்டு புரண்டது பல நேரம்……!!

கொஞ்சி முடித்து குதூகலித்து
வெறுத்துப் போச்சுதிப்போ……!
நாச்சியாரை வெறுத்துவிட....,
மாமியாரை ஏவுகிறான்…….!!

மாமியாரின் கொடுமையிலே
மண்ணே மக்கி உக்கிப் போகும்…!
தண்ணிக்கே விக்கல் எடுத்து விடும்……!!

சோகத்தில் அவள்…!
போதையில் அவன்…!!

காதலிக்கும் போது
கண்ணியம் கதைப்பார்…!
கல்யாணம் முடிந்ததும்
காலால் உதைப்பார்…!!

ஏனிந்த அவலம்
பெண்களுக்கு மட்டும்…?
பெண்ணவளுக்கு எதிரி
பெண்ணும் கூடத்தான்…..!

அத்தானை…. மச்சானை….
மாமாவை….. நண்பனை…..
யாரைத்தான் நம்புவது
இந்தக் காலத்தில்...…?

பெண் என்றாலே...,
காமப்பார்வை பார்க்கும்,
கயவர் கூட்டம்
பெருகிப் போச்சு…..!

என்ன செய்வேன் நான்…?
பெண்ணாகி விட்டேன்….
வெறுத்துப்போனாலும்
பொறுத்தே போகிறேன்…!

கல்யாணமாகி…..
கருவிலே உரு வரவில்லை….
தருவிலே சந்தேகம்
அந்த அயோக்கியனுக்கு……..!

யோக்கியம் பேசும்
மனிதர்கள் எல்லாம்
யோக்கியர் தானா சொல்லுங்கள்
உங்கள் மனதை தொட்டு…..!!!

Tuesday, April 1, 2008

கண்முன்னே தெய்வம் இருக்க...,








அம்மா.......,

உலகத்தின் பொது மொழி..
அனைவரும்
அறிந்த மொழி...
விலங்குகள்
உட்பட,
உயிரினங்களுக்கும்
தெரிந்த மொழி.....!


பிரபஞ்சத்தில் தாய்....,

உயிரினங்களின் ஆரம்பம...
ஆரம்பகட்டத்தின்
வளர்ச்சி...
பாசத்தின்
திற்வுகோல்....
பண்பின்
உறைவிடம்....!

கண்முன்னே தெய்வம் இருக்க...,
கல்லையே
கும்பிடுவோர்...,
கண்
தெரிந்த குருடர்,
காது
கேட்கும் செவிடர்......!

உன்னை படைத்த தாயை...
ஒருசொட்டும்
கலங்காது,
காத்துப்
பார்த்திரு....
தேடிவரும்
உன்னை..,
செல்வம்
செல்வாக்கெல்லாம்......!

அம்மா என்ற சொல்லுக்கு..,
பொருள்
சொல்ல, மொழி இல்லை...
அம்மாவுக்கு
விளக்கம்,
அம்மா
என்பது மட்டும் தான்....!

உனக்காக பிரார்த்திக்கும்....,
தாயை
நீ வணங்கிட்டால்...,
உலகத்தில்
கொடுத்து வைத்தவன்..
உன்னை
விட யாருமில்லை....!

தாயை நேசிப்பவன் தான்......,
தாய்
நாட்டை நேசிப்பான்.
தாய்
நாட்டை நேசிப்பவன் தான்...,
தாயையும்
நேசிப்பான்....!

தாயை நேசிக்காதவன்...,
தாய்
நாட்டை தூசிப்பான்....
தாய்
நாட்டை தூசிப்பவன்....,
தாயையும்
தூசிப்பான்......!